ஆப்நகரம்

தொண்டையில் அறுவை சிகிச்சை... மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்த அழகி.. அதிர்ச்சியில் ரசிகர்கள்!

தொண்டடையில் அறுவை சிகிச்சை செய்த மாடல் அழகி மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 24 Jun 2022, 9:28 pm
2018ஆம் ஆண்டுக்கான மிஸ் பிரேசில் பட்டம் வென்றவர் கிளெய்சி கொரிய்யா. 27 வயதான இவர் மெகே நகரில் ஒப்பனை நிபுணராக பணியாற்றி வந்தார். இவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு தொண்டையில் பிரச்சனை ஏற்பட்டது.
Samayam Tamil Gleycy Correia


இதையடுத்து அங்குள்ள மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்றார் கிளெய்சி கொரிய்யா. கடந்த ஏப்ரல் மாதம் மருத்துவர்கள் அவருக்கு தொண்டையில் அறுவை சிகிச்சை செய்தனர். அறுவை சிகிச்சை செய்த ஐந்து நாட்களில் கிளெய்சி கொரிய்யாவின் உடல்நிலை திடீரென மோசமானது.
மேலும் மாரடைப்பு ஏற்பட்டு சுயநினைவை இழந்துள்ளார் கிளெய்சி கொரிய்யா. இதனைத் தொடர்ந்து இரண்டு மாதங்களாக கோமாவில் இருந்த கிளெய்சி கொரிய்யா கடந்த திங்கள் கிழமை திடீரென மரணமடைந்தார். தொண்டையில் செய்த அறுவை சிகிச்சைதான் கிளெய்சியின் உயிரை பறித்ததாக அவரது குடும்பத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர்.

அமலும் அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், அறுவை சிகிச்சை மேற்கொண்ட மருத்துவமனையை விசாரிக்க வேண்டும் எனவும் கிளெய்சியின் குடும்பத்தினர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பட்டுள்ளது. அறுவை சிகிச்சையால் அழகி ஒருவர் மரணமடைந்த சம்பவம் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்