ஆப்நகரம்

எனக்கும், காதலருக்கும் லாக்டவுனில் ரகசியமாக திருமணமாகிவிட்டது: உண்மையை சொன்ன நடிகை

ஸ்லம்டாக் மில்லியனர் படம் புகழ் ஃப்ரீடா பின்டோவும், கோரி டிரானும் லாக்டவுனின்போது ரகசியமாக திருமணம் செய்து கொண்டிருக்கிறார்கள்.

Samayam Tamil 22 Oct 2021, 10:32 am
லாக்டவுன் நேரத்தில் தனக்கும், கோரி டிரானுக்கும் ரகசியமாக திருமணம் நடந்துவிட்டது என்று நடிகை ஃப்ரீடா பின்டோ தெரிவித்துள்ளார்.
Samayam Tamil freida pinto marries cory tran during lockdown
எனக்கும், காதலருக்கும் லாக்டவுனில் ரகசியமாக திருமணமாகிவிட்டது: உண்மையை சொன்ன நடிகை



ஃப்ரீடா பின்டோ

ஸ்லம்டாக் மில்லியனர் படம் மூலம் பிரபலமானவர் ஃப்ரீடா பின்டோ. அதன் பிறகு அவர் தொடர்ந்து ஹாலிவுட் படங்களில் நடித்து வருகிறார். ஃப்ரீடாவுக்கும், கோரி டிரான் என்கிற புகைப்படக் கலைஞருக்கும் இடையே காதல் ஏற்பட்டது. இதையடுத்து அவர்களுக்கு நிச்சயதார்த்தம் நடந்தது. தான் கர்ப்பமாக இருப்பதாக ஜூன் மாதம் சமூக வலைதளத்தில் அறிவித்தார் ஃப்ரீடா.

திருமணம்

வெளிநாட்டில் திருமணத்திற்கு முன்பே கர்ப்பமாவது சர்வ சாதாரணம். ஆனால் இந்திய பெண்ணாக இருந்து கொண்டு இப்படி செய்யலாமா என்று ரசிகர்கள் ஃப்ரீடாவை விமர்சித்தார்கள். இந்நிலையில் அக்டோபர் 20ம் தேதி டிவி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ஃப்ரீடா, தனக்கும், கோரிக்கும் திருமணமாகிவிட்டதாக தெரிவித்துள்ளார்.

லாக்டவுன்

திருமணம் பற்றி ஃப்ரீடா கூறியதாவது, நான் பிரமாண்டமாக திருமணம் செய்து கொள்ள திட்டமிடவில்லை. எளிமையாக இருக்க வேண்டும் என்று நினைத்தேன். அந்த நேரத்தில் கோவிட் பிரச்சனை ஏற்பட்டது. என் திருமணத்திற்காக திட்டமிட்டு டென்ஷனாக விரும்பவில்லை. கலிபோர்னியாவில் எங்களுக்கு திருமணம் நடந்தது. அது முடிந்து மதியம் வீட்டிற்கு சென்று ஓய்வு எடுத்தோம் என்றார்.

போட்டோஷூட்

கர்ப்பிணியான ஃப்ரீடா வெள்ளை நிற பிகினி அணிந்து நடத்திய போட்டோஷூட்டின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் போஸ்ட் செய்தார். அந்த புகைப்படங்கள் வைரலாகின. இந்நிலையில் ஃப்ரீடாவுக்கு அவரின் முன்னாள் காதலரும், நண்பருமான தேவ் பட்டேல் வாழ்த்து தெரிவித்தாரா என்பதை தெரிந்து கொள்ள ரசிகர்கள் விரும்புகிறார்கள்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்