ஆப்நகரம்

இளவரசி, விபச்சார தொழில், பத்திரிகையாளர் : நடிகை அனைகா

இளவரசியில் இருந்து விபச்சார தொழில், அதிலிருந்து பத்திரிகையாளர் அவதாரம் எடுத்துள்ளதாக நடிகை அனைகா பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.

TNN 23 Aug 2016, 11:57 am
இளவரசியில் இருந்து விபச்சார தொழில், அதிலிருந்து பத்திரிகையாளர் அவதாரம் எடுத்துள்ளதாக நடிகை அனைகா பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.
Samayam Tamil from princess to journalist says anika soti
இளவரசி, விபச்சார தொழில், பத்திரிகையாளர் : நடிகை அனைகா


இயக்குநர் வசந்தபாலனின் காவியத்தலைவன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை அனைகா சோதி. அந்தப்படம் பெரிதாக வெற்றி பெறவில்லை என்றாலும் கூட விமர்சகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. அதனைத்தொடர்ந்து நடிகர் அதர்வாவுடன் “செம போத ஆகாத” திரைப்படத்தில் விபச்சார தொழில் செய்பவராக நடித்துள்ளார். தற்போது அறிமுக இயக்குநர் கலீஸ் இயக்கும் கீ எனும் படத்தில் பத்திரிகையாளராக நடித்து வருகிறார். இது பற்றி கருத்து தெரிவித்துள்ள அனைகா, வித்தியாசமான கதாப்பாத்திரங்களில் நடிப்பது மகிழ்ச்சியாக உள்ளதென கூறியுள்ளார். இளவரசி, விபச்சார தொழில் தற்போது பத்திரிகையாளர் என்று வெவ்வேறு கேரக்டர்கள் சவாலாக உள்ளன என்றார்.

கீ படத்தில் நடிகர் ஜீவாவுடன் சேர்ந்து நடிக்கிறார். ஷூட்டிங்கின் போது ஜீவா டயலாக் பேசுவதற்கு உதவி செய்வார் என்றும், தமிழ் சினிமாவின் இளம் ஹீரோக்களுடன் நடிப்பது சந்தோஷமாக உள்ளது என்றும் கூறியுள்ளார். சித்தார்த், அதர்வா தற்போது ஜீவாவுடன் நடித்து வருகிறார். செப்டம்பரில் மீண்டும் ஷூட்டிங்கில் இணைய உள்ளார் அனைகா.

அடுத்த செய்தி

டிரெண்டிங்