ஆப்நகரம்

பாலியல் தொல்லை கொடுத்த வைரமுத்து காலில் விழுந்தது ஏன்: சின்மயிக்கு ரசிகர்கள் கேள்வி!

தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாக கூறும் வைரமுத்து காலில் ஏன் திருமணத்தின் போது காலில் விழுந்தீர்கள் என ரசிகர்கள் சின்மயிக்கு கேள்வி எழுப்பியுள்ளனர்.

Samayam Tamil 10 Oct 2018, 3:52 pm
பிரபல பாடகி சின்மயி, சமீபகாலமாக தனக்கும் தன்னைப் போல மற்ற பெண்களுக்கும் நடந்த பாலியல் சம்பவங்கள் பற்றிய தகவல்களை தனது டுவிட்டர் இணையதளத்தில் பதிவிட்டு வருகிறார். குறிப்பாக அவர் கவிஞர் வைரமுத்து மீது சுமத்திய பாலியல் குற்றச்சாட்டால் தமிழ் திரையுலகில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Samayam Tamil chinmayie


இந்த நிலையில் சின்மயி திருமணத்தின் போது மணக்கோலத்தில் வைரமுத்து காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கியுள்ள வீடியோ தற்போது இணையளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. பாடகி சின்மயிக்கு கடந்த 2014ல் திருமணம் நடந்தது.

இந்நிலையில் அவர் கடந்த 2005ஆம் ஆண்டு முதல் வைரமுத்துவின் இன்னொரு முகம் தனக்கு தெரியும் என்று கூறியுள்ளார். 2014ஆம் ஆண்டு நடந்த திருமணத்தின்போது பாடகி சின்மயி, கவிஞர் வைரமுத்துவின் காலில் விழுந்து ஆசி பெற்றது முரண்பாடாக இருப்பதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

அவர் பாலியல் தொல்லை கொடுத்தவர் என்று தெரிந்தும் வைரமுத்துவின் காலில் விழுந்து ஆசி வாங்கியது ஏன்? என்ற கேள்வியை நெட்டிசன்கள் கேட்டு வருகின்றனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்