ஆப்நகரம்

போதையில் புதுமாப்பிள்ளை கலாட்டா

படப்பிடிப்பில் புதுமாப்பிள்ளை பாபி சிம்ஹா போதையில் கலாட்டா செய்துள்ளதாக படத்தின் தயாரிப்பாளர் கூறியுள்ளார்.

TOI Contributor 25 May 2016, 5:30 pm
படப்பிடிப்பில் புதுமாப்பிள்ளை பாபி சிம்ஹா போதையில் கலாட்டா செய்துள்ளதாக படத்தின் தயாரிப்பாளர் கூறியுள்ளார்.
Samayam Tamil fully drunk bobby simha behaved violently in shooting says meera jaakiradhai movie producer
போதையில் புதுமாப்பிள்ளை கலாட்டா


தற்போது தமிழ் சினிமாவில் புது மாப்பிள்ளை பாபி சிம்ஹா. ஆனால் இப்போதோ இவருக்கு பிரச்னைகள் வந்து கொண்டிருக்கிறது.மீரா ஜாக்கிரதை என்ற படத்தில் தான் நடிக்கவில்லை என்றும், அப்பட புரொமோஷனுக்காக படக்குழுவினர் என் பெயரை பயன்படுத்தி வருவதாக, இதனால் தன் பெயருக்கு களங்கம் விளைவிக்க சிலர் சதி செய்கிறார்கள் என பாபி சிம்ஹா நடிகர் சங்கத்தில் புகார் அளித்திருந்தார்.

தற்போது அவருக்கு பதில் அளிக்கும் வகையில் அப்பட தயாரிப்பாளர், பாபி சிம்ஹா ‘மீரா ஜாக்கிரதை’ என்ற படத்தில் சில நாட்கள் நடித்தார். ஒரு நாள் சதீஸ் என்பவருடன் மது அருந்திவிட்டு படப்பிடிப்புக்கு வந்தார். போதையில் இயக்குனரை அடிக்க முயன்றார். இதனால் போலீஸில் புகார் கொடுத்தோம். அதோடு படப்பிடிப்பு முடங்கிவிட்டது.சிறிது இடைவேளைக்கு பிறகு படத்தை முடித்து வருகிற 27ம் தேதி படத்தை வெளியிட இருக்கிறோம். இந்நிலையில் எனக்கும், என் நிறுவனத்துக்கும் களங்கம் விளைவிக்கும் வகையில் பாபி சிம்ஹா நடந்து வருகிறார் என புகார் கொடுத்துள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்