ஆப்நகரம்

ஆட்டம் போட வைக்கும் மதுரவாயல் பாடல்: ரியோ ராஜ் பெருமிதம்!

சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ரியோ ராஜ் நடிப்பில் உருவாகி வரும் படத்தின் 2ம் கட்ட படப்பிடிப்பு தற்போது முடிக்கப்பட்டுள்ளது.

Samayam Tamil 5 Mar 2019, 10:46 pm
சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ரியோ ராஜ் நடிப்பில் உருவாகி வரும் படத்தின் 2ம் கட்ட படப்பிடிப்பு தற்போது முடிக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil maduravoyal


இயக்குனர் கார்த்திக் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ரியோ ராஜ் இன்னும் டைட்டில் வைக்கப்படாத படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார். இப்படத்தில், ராதாரவி, நாஞ்சில் சம்பத், விக்னேஷ் காந்த் ஆகியோர் பலர் நடித்து வருகின்றனர். இவர்களுடன் இணைந்து யூடியூப் பிரபலங்கள் பலரும் நடித்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு மதுரவாயல் பகுதியில் செட் அமைக்கப்பட்டு படமாக்கப்பட்டது. இதில், ஏராளமான இளைஞர்கள் கலந்து கொண்டு நடனம் ஆடியுள்ளனர்.

இப்படம் குறித்து இயக்குனர் கார்த்திக் கூறுகையில், அரசியல் பின்னணிக் கதையை மையப்படுத்தி இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. இப்படத்திற்கு நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு என்ற டைட்டில் வைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. ஆனால், உண்மையில் அது டைட்டில் இல்லை. படப்பிடிப்பு முழுவதும் நகைச்சுவையாக சென்று கொண்டிருக்கிறது. சிவகார்த்திகேயனுக்கு எனது நன்றி என்று குறிப்பிட்டுள்ளார்.

இவரைத் தொடர்ந்து படத்தின் ஹீரோ ரியோ ராஜ் கூறுகையில், தற்போது இப்படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு பாடல் படமாக்கப்பட்டுள்ளது. இந்தப் பாடலுக்கு இளைஞர்களிடையே நல்ல வரவேற்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று அவர் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்