ஆப்நகரம்

சேரனுக்காக நிதி திரட்டும் நடிகை ரோகினி!

தயாரிப்பாளர் சேரனுக்காக நடிகை ரோகினி நிதி திரட்டவுள்ளார்.

TNN 16 Dec 2016, 4:10 pm
சேரனின் தயாரிப்பில் நடிகை ரோகினி இயக்கிய முதல் படம் ‘அப்பாவின் மீசை. இந்தப் படத்தில் பசுபதி, நித்யா மேனன், சலீம்குமார் உள்பட பலர் நடித்துள்ளனனர். படத்திற்கு அல்போன்ஸ் குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார், ரசூல்பூக்குட்டி ஒளிப்பதிவு செய்துள்ளார்.
Samayam Tamil fundraising for cheran actress rohini
சேரனுக்காக நிதி திரட்டும் நடிகை ரோகினி!


இதன் படப்பிடிப்புகள் முடிந்து மூன்று வருடங்கள் ஆனது. இந்நிலையில் தயாரிப்பாளர் சேரனுக்கு பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. மேற்கொண்டு படத்தின் பணிகளை தொடரமுடியாமல் நடிகை ரோகினி கஷ்டப்படுகிறார். படத்தை வெளியில் கொண்டு வர குறைந்தபட்சம் 40 லட்சம் ரூபாய் தேவைப்படுகிறதாம். இதனை க்ரவுட் பண்டிங் முறையில் திரட்ட ரோகினி முடிவு செய்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது பேஸ்புக்கில்... ‘‘கன்னடத்தில் ‘லூசியா, ‘யூ டேர்ன்’ஆகிய படங்கள் க்ரவுண்ட் பண்டிங் முறையில் நிதி திரட்டி தயாரிக்கபப்பட்டு பெரும் வெற்றி பெற்றது. தமிழில் பார்த்திபன் ‘கோடிட்ட இடங்களை நிரப்புக’ படத்தையும் க்ரவுட் பண்டிங் முறையில் தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ரோகினியின் ‘அப்பாவின் மீசை’படம் ஒரு உண்மை சம்பவத்தின் அடிப்படையிலானது. அப்பாவுக்கும் மகனுக்குமான உறவை சொல்கிற படம். ஆகையால் இந்தப் படத்திற்கு தேவையான நிதியை க்ரவுண்ட் பண்டிங் முறையில் திரட்டவுள்ளார் நடிகை ரோகினி.

அடுத்த செய்தி

டிரெண்டிங்