ஆப்நகரம்

சென்னையில் திரைப்பட நடிகர்களின் பாதுகாவலர் மீது தாக்குதல்!!

நடிகர் ராணா டகுபதி உள்பட பல்வேறு திரைப்பட பிரபலங்களுக்கு பாதுகாவலராக பணியாற்றி வந்த செந்தில்நாதன் மீது பழைய பகை காரணமாக 3 பேர் நடத்திய தாக்குதலில் அவர் பலத்த காயமடைந்தார்.

TOI Contributor 5 Jun 2017, 4:54 pm
நடிகர் ராணா டகுபதி உள்பட பல்வேறு திரைப்பட பிரபலங்களுக்கு பாதுகாவலராக பணியாற்றி வந்த செந்தில்நாதன் மீது பழைய பகை காரணமாக 3 பேர் நடத்திய தாக்குதலில் அவர் பலத்த காயமடைந்தார்.
Samayam Tamil gang attacks film actors body guard in chennai
சென்னையில் திரைப்பட நடிகர்களின் பாதுகாவலர் மீது தாக்குதல்!!


சென்னையில் உள்ள போர்ஷோர் எஸ்டேட் பகுதியைச் சேர்ந்தவர் செந்தில்நாதன். இவர் பாட்டாளி மக்கள் கட்சி உறுப்பினராக இருக்கிறார். பாகுபலி புகழ் ராணா டகுபதி உலப்ட பல்வேறு திரைப்பட பிரபலங்களுக்கு பாதுகாப்பு அளித்து வந்தவர்.

இவர் இன்று காலை தாக்கப்பட்டது குறித்து போலீசார் கூறுகையில், ''வழக்கம் போல் இன்று காலை செந்தில்நாதன் வாக்கிங் சென்று கொண்டு இருந்தார். அப்போது இரண்டு இரு சக்கர வாகனங்களில் அங்கு வந்த மூன்று பேர் கூர்மையான ஆயுதங்களால் செந்தில்நாதனை தாக்கினர். இதில் அவருக்கு முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

முதல்கட்ட விசாரணையில், செந்தில்நாதனுக்கும் அவர் வீடு அருகே குடியிருந்து வரும் அதிமுகவைச் சேர்ந்த குணா என்பவருக்கும் பகை இருந்து வந்துள்ளது. குணாவின் மகன் தினேஷ், தினேஷின் மாமா கந்தன், தினேஷின் நண்பர் தினேஷ் குமார் ஆகியோர் இந்த தாக்குதலை நடத்தியுள்ளனர். மக்கள் அந்த இடத்தில் கூடவே, அந்த இடத்தை விட்டு தாக்குதல் நடத்தியவர்கள் தப்பிச் சென்றனர். முகத்தில் பலத்த காயமடைந்த செந்தில்நாதனை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்ந்துள்ளனர். பின்னர் அங்கிருந்து ஸ்டேன்லி மருத்துவனையில் சேர்த்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது நிலை கவலைக்கிடமான நிலையில் உள்ளது'' என்றனர்.

A man who worked as a bouncer for many film artists and celebrities suffered severe injuries after a three-member gang attacked him at Foreshore Estate in Chennai on Monday due to previous enmity.

அடுத்த செய்தி

டிரெண்டிங்