ஆப்நகரம்

காதலர் தினத்தின் மனைவியுடன் பழனி முருகன் கோவிலுக்கு வந்த கெளதம்: மனமுருகி பிரார்த்தனை.!

பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் நடிகர் கௌதம் கார்த்திக் மனைவி மஞ்சிமா மோகனுடன் சாமி தரிசனம் செய்துள்ளார்.

Authored byஆஷிக் முகமது | Samayam Tamil 15 Feb 2023, 7:43 am
தமிழ் சினிமாவில் ஆரம்ப காலங்களில் ஹரஹர மஹாதேவகி, இருட்டு அறையில் முரட்டு குத்து உள்ளிட்ட படங்களில் நடித்து சர்ச்சைகளில் சிக்கியவர் கெளதம் கார்த்திக். இவர் தற்போது சிம்புவுடன் இணைந்து ‘பத்து தல’ படத்தில் நடித்து வருகிறார்.
Samayam Tamil Gautham Karthik
Gautham Karthik


நவரச நாயகன் கார்த்திக்கின் மகனான கௌதம் கார்த்திக் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நாயகர்களின் வரிசையில் உள்ளார். இவர் கைவசம் தற்போது பத்து தல, செல்லப்பிள்ளை ஆகிய படங்கள் உள்ளன. 'பத்து தல' பட ரிலீசுக்காக ஆர்வமுடன் காத்து வருகிறார் கெளதம். இதனை 'சில்லுனு ஒரு காதல்' படத்தை இயக்கிய கிருஷ்ணன் இயக்குகிறார்.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

இந்நிலையில் ’தேவராட்டம்’ என்ற படத்தில் நடித்த போது கெளதம், மஞ்சிமா மோகன் இருவரும் ஒருவரை ஒருவர் காதலிக்க ஆரம்பித்ததாக இணையத்தில் செய்திகள் பரவியது. இதனை இருவரும் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக உறுதி செய்து தங்களின் க்யூட் புகைப்படங்களை சோஷியல் மீடியாக்களில் பகிர்ந்தனர்.

இந்நிலையில் இவர்கள் இருவரும் கடந்த வருடம் நவம்பர் 28 ஆம் தேதி திருமணம் செய்து கொண்டனர். இவர்களது திருமணத்திற்கு திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்தனர். இதனிடையில் நேற்று காதலர் தினத்தில் கெளதம், மஞ்சிமா இருவரும் பழனி கோயிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்துள்ளனர்.

'மாவீரன்' படக்குழு வெளியிட்ட அசத்தலான அறிவிப்பு: கொண்டாட்டத்தில் எஸ்கே ரசிகர்கள்.!

மலையடிவாரத்தில் இருந்து ரோப் கார் மூலமாக கௌதம் கார்த்திக் மற்றும் மஞ்சிமா மோகன் இருவரும் சாமி தரிசனம் செய்ய மலை மீது சென்றுள்ளனர். அங்கு அவர்களை பார்த்ததும் பக்தர்கள் பலரும் புகைப்படம் எடுக்க திரண்டுள்ளனர்.

இதனையடுத்து விரைவாக சாமி தரிசனம் செய்ய அழைத்து செல்லப்பட்டார் கௌதம் கார்த்திக். அதன்பின்னர் கோயில் நிர்வாகத்தால் வழங்கப்பட்ட பிரசாதத்தை பெற்றுக்கொண்டு மலைமீது இருந்து கீழே இறங்கி புறப்பட்டுச் சென்றார். முன்னதாக நடிகை சமந்தாவும் தன்னுடைய உடல்நலம் தேற வேண்டும் என்று வேண்டி பழனி படிக்கட்டுகளில் விளக்கு ஏற்றியது குறிப்பிடத்தக்கது.

Amir, Pavani: காதலர் தினத்தில் நல்ல சேதி சொன்ன அமீர் - பாவனி: குவியும் வாழ்த்துக்கள்.!
எழுத்தாளர் பற்றி
ஆஷிக் முகமது
நான் ஆசிக் முகமது. ஊடகத்துறையில் கடந்த நான்கு வருடமாக பணியாற்றி வருகிறேன். எழுத்தின் மீதிருந்த ஆர்வத்தால் இந்த துறையை தேர்ந்தெடுத்தேன். அரசியல், கவிதை, சினிமாவில் ஆர்வம் கொண்ட நான், தற்போது டைம்ஸ் ஆப் இந்தியாவின் சமயம் தமிழ் இணைய ஊடகத்தில் சினிமா சம்பந்தமான கட்டுரைகள் எழுதி வருகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்