ஆப்நகரம்

இரண்டாம் முறையாக அஜித்தை வைத்து இயக்கவுள்ள கௌதம் மேனன்!

‘என்னை அறிந்தால்’ படத்தை அடுத்து மீண்டும் அஜித்தை வைத்து ஒரு படத்தை இயக்கவுள்ளார் இயக்குனர் கௌதம் மேனன்!

Samayam Tamil 16 May 2018, 5:35 pm
‘என்னை அறிந்தால்’ படத்தை அடுத்து மீண்டும் அஜித்தை வைத்து ஒரு படத்தை இயக்கவுள்ளார் இயக்குனர் கௌதம் மேனன்!
Samayam Tamil gautham-menon


அஜித், கௌதம் மேனன் கூட்டணியில் வெளியான படம் ‘என்னை அறிந்தால்’. இந்தப் படத்திற்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்நிலையில் மீண்டும் இவர்கள் இருவரும் இணையவிருப்பதாக கூறப்படுகிறது.

தற்போது கௌதம் மேனன் ‘துருவ நட்சத்திரம்’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் விக்ரம் ஹீரோவாக நடித்து வருகிறார். அத்துடன் தனுஷை வைத்து ‘என்னை நோக்கி பாயும் தோட்டா’ என்ற படத்தையும் இயக்கி வருகிறார். இந்தப் படம் தற்போது வெளியீட்டுக்கு தயாராக உள்ளது.

இந்த நிலையில், கவுதம்மேனன் அஜித்துக்காக ஒரு கதை தயார் செய்து வைத்துள்ளாராம். அதை சொல்வதற்கு அஜித்திடம் நேரம் கேட்டிருக்கிறாராம்.

நடிகர் அஜித் தற்போது ‘விஸ்வாசம்’ படத்தில் பிஸியாக நடிதது வருகிறார். ‘விஸ்வாசம்’ படம் கிராமம் சார்ந்த கதை என்பதால் அடுத்து கௌதம் மேனன் படத்தில் அஜித் நடிக்க வாய்ப்பு இருக்கிறதாம். இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்