ஆப்நகரம்

Gautham Menon: தூசு தட்டப்படும் கிடப்பில் போடப்பட்ட படம்: மீண்டும் கெளதமுடன் இணையும் விஜய்.!

'துருவ நட்சத்திரம்' படத்தை தொடர்ந்து கெளதம் மேனனின் கிடப்பில் போடப்பட்ட படம் ஒன்று மீண்டும் துவங்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Authored byஆஷிக் முகமது | Samayam Tamil 8 Feb 2023, 6:44 pm
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் கெளதம் மேனன். தற்போது பிசியான நடிகராகவும் இருந்து வருகிறார். இவர் அண்மையில் சந்தீப் கிஷன், விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான மைக்கேல் படத்தில் நடித்திருந்தார். இதனையடுத்து தற்போது லோகேஷ் கனகராஜ் - விஜய் கூட்டணியில் உருவாகும் லியோ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளார்.
Samayam Tamil Gautham Menon
Gautham Menon


கெளதம் மேனன் நடிப்பில் கடந்த வருடம் 'வெந்து தணிந்தது காடு' படாம் வெளியானது. விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா படத்திற்கு பிறகு மூன்றவாது முறையாக சிம்பு, கெளதம் கூட்டணியில் இந்தப்படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்ற இந்தப்படம் வசூலிலும் மிகப்பெரிய சாதனை படைத்தது.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

இதனையடுத்து கெளதம் மேனன் இயக்கும் எந்த படத்தின் அறிவிப்பும் வெளியாகாமல் இருந்தது. இந்நிலையில் கடந்த 2017 ஆம் ஆண்டு கெளதம் மேனன் இயக்கத்தில் துவங்கப்பட்ட 'துருவ நட்சத்திரம்' படம் விரைவில் ரிலீஸ் ஆகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த 2017 ஆம் ஆண்டே துவங்கப்பட்ட இந்தப்படம், பல்வேறு காரணங்களால் முழுமையாக முடிக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டது.

இந்நிலையில் கடந்த வருட இறுதியில் இந்தப்படத்தின் வேலைகள் மீண்டும் தொடங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனையடுத்து விரைவில் படம் ரிலீசாகவுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் விக்ரம் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர்.

Vijay Sethupathi: எனக்கு அதில் விருப்பமே இல்லை: நடிகர் விஜய் சேதுபதி அதிரடி.!

இந்நிலையில், கெளதம் மேனன் கிடப்பில் போட்ட மற்றுமொரு படமும் துவங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இவர் இயக்கத்தில் அஜித் நடித்த 'என்னை அறிந்தால்' படம் மிகப்பெரிய அளவில் வெற்றியை பெற்றது. இந்தப்படத்தில் அஜித்துக்கு இணையாக அருண் விஜய்யின் விக்டர் என்கிற வில்லன் கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது.

Disha Patani: ‘சூர்யா 42’ பட நாயகி செய்த காரியம்: தரமான சம்பவமா இருக்கே...!

இதனையடுத்து 'விக்டர்' என்ற கதாபாத்திரத்தில் அருண் விஜய்யை வைத்து படம் இயக்க முடிவு செய்திருந்தார் கெளதம் மேனன். ஆனால் இந்தப்படமும் கிடப்பில் போடப்பட்டது. இந்நிலையில் இந்தப்படத்தை மீண்டும் துவங்க முடிவு செய்துள்ளாராம் கெளதம். அருண் விஜய்யின் அடுத்த படமாக 'விக்டர்' இருக்கும் எனவும் கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.
எழுத்தாளர் பற்றி
ஆஷிக் முகமது
நான் ஆசிக் முகமது. ஊடகத்துறையில் கடந்த நான்கு வருடமாக பணியாற்றி வருகிறேன். எழுத்தின் மீதிருந்த ஆர்வத்தால் இந்த துறையை தேர்ந்தெடுத்தேன். அரசியல், கவிதை, சினிமாவில் ஆர்வம் கொண்ட நான், தற்போது டைம்ஸ் ஆப் இந்தியாவின் சமயம் தமிழ் இணைய ஊடகத்தில் சினிமா சம்பந்தமான கட்டுரைகள் எழுதி வருகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்