ஆப்நகரம்

காசு இருப்பவர்கள் தானே உதவ முடியும்: ரஜினி, விஜய் சேதுபதி பற்றி காயத்ரி ரகுராம்

காசு இருப்பவர்கள் தானே இதுபோன்ற நேரத்தில் உதவ முடியும் என ரஜினி மற்றும் விஜய் சேதுபதி ஆகியோரை பற்றி பேசியுள்ளார் காயத்ரி ரகுராம்.

Samayam Tamil 24 Mar 2020, 4:41 pm
சினிமா படங்களின் ஷூட்டிங் தற்போது முழுவதும் நிறுத்தப்பட்டுள்ளது. அதனால் தொழிலாளர்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். வேலை இல்லாமல் போனதால் பல தொழிலாளர்கள் உணவுக்கு கூட கஷ்டப்படுகின்றனர் என கூறப்பட்டதால் முன்னணி நடிகர்கள் பலர் உதவி செய்து வருகின்றனர்.
Samayam Tamil Gayathri Raghuram tweets about FEFSI actors help


FEFSI சங்கத்திற்கு சூர்யா குடும்பம் 10 லட்சம், சிவகார்த்திகேயன் 10 லட்சம், ரஜினி 50 லட்சம் மற்றும் 10 லட்சம் நிதி உதவி அளித்துள்ளனர்.

அதுமட்டுமின்றி நடிகர் பிரகாஷ்ராஜ் 150 மூட்டை அரிசி வாங்கிகொடுத்துள்ளார். மற்றும் தயாரிப்பாளர் தாணு 100 மூட்டை அரிசி அனுப்பி வைத்துள்ளார்.

இவர்கள் செய்யும் உதவி பற்றி பிரபல நடன இயக்குனர் காயத்ரி ரகுராம் ட்விட்டரில் பேசியுள்ளார். "இதுபோன்ற நேரத்தில் நடிகர்கள் தான் முன்வந்து உதவி செய்வார்கள்" என ரஜினி மற்றும் விஜய் சேதுபதியின் பெயரைகுறிப்பிட்டுள்ளார் அவர். "அதே நேரத்தில் பணம் இருப்பவர்கள் தானே உதவி செய்யமுடியும், இது போன்ற நேரத்தில்" என்றும் கூறியுள்ளார்.


இந்த ட்விட்டுக்கு பதில் அளித்த சிலர் "நீங்களும் நடிகை தானே, முதலில் உதவுங்கள், ரஜினி விஜய் சேதுபதி பற்றி பிறகு நக்கலாக பேசலாம்" என தெரிவித்துள்ளனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்