தான் இயக்குனராக வேண்டும் என்ற தனது அப்பாவின் கனவை நிறைவேற்றி இருப்பதாக நடிகை காயத்ரி ரகுராம் தெரிவித்துள்ளார்.
மறைந்த பிரபல திரைப்பட நடன இயக்குனர் ரகுராமின் மகள் காயத்ரி ரகுராம். இவர் நடிகையாக சினிமாவில் அறிமுகமானார். ‘சார்லி சாப்ளின்’, ‘விசில்’, ‘ஸ்டைல்’, ‘வானம்’ உள்பட பல படங்களில் நடித்தார். பின்னர் திருமணம் செய்து கொண்டு வெளிநாட்டில் குடியேறினார். பின்னர் கணவரை விவாகரத்து செய்து விட்டு மீண்டும் சினிமாவில் நடன இயக்குனராக பணியாற்றினார்.
தற்போது காயத்ரி ரகுராம் முன்னணி நடன இயக்குனராக உள்ளார். தற்போது இவர் இயக்குனராக அவதாரம் எடுத்து ‘யாதுமாகி நின்றாய்’ என்ற படத்தையும் இயக்கி வருகிறார்.
இது குறித்து காயத்ரி ரகுராம் கூறுகையில், ‘’நான் சினிமாவுக்கு வந்து 15 வருடங்களாகிறது. குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, ஹீரோயினாக, நடன கலைஞராக, நடன இயக்குனராக எனது சினிமா பயணம் அமைந்தது.
1980களில் சினிமாவில் நடனமாடும் கலைஞர்களின் வாழ்க்கை மிக கடுமையாக இருந்திருக்கிறது. அவற்றில் சிலவற்றை நான் கேள்விப்பட்டிருக்கிறேன். சிலவற்றை பார்த்திருக்கிறேன். அதை சினிமாவாக எடுக்க வேண்டும் என்ற நிஜ சம்பவங்களை கோர்த்து ஸ்கிரிப்ட் எழுதினேன். இதை நல்ல இயக்குனரை கொண்டு படமாக்க நினைத்திருந்தேன். என்னுடைய அப்பா “நீ எழுதின கதையை நீயே இயக்கு” என்று என்னை ஒரு இயக்குனராக்கி பார்க்க ஆசைப்பட்டார். அவர் இப்போது இல்லை. நடன கலைஞர்களின் வாழ்க்கையை இதுவரை யாரும் சினிமாவாக எடுத்ததில்லை. நான் எடுத்து அந்த கலைஞர்களுக்கே அதனை சமர்பிக்கிறேன்’’ என்றார்.
Gayathri Raguram fulfilled her father’s dream!!
மறைந்த பிரபல திரைப்பட நடன இயக்குனர் ரகுராமின் மகள் காயத்ரி ரகுராம். இவர் நடிகையாக சினிமாவில் அறிமுகமானார். ‘சார்லி சாப்ளின்’, ‘விசில்’, ‘ஸ்டைல்’, ‘வானம்’ உள்பட பல படங்களில் நடித்தார். பின்னர் திருமணம் செய்து கொண்டு வெளிநாட்டில் குடியேறினார். பின்னர் கணவரை விவாகரத்து செய்து விட்டு மீண்டும் சினிமாவில் நடன இயக்குனராக பணியாற்றினார்.
தற்போது காயத்ரி ரகுராம் முன்னணி நடன இயக்குனராக உள்ளார். தற்போது இவர் இயக்குனராக அவதாரம் எடுத்து ‘யாதுமாகி நின்றாய்’ என்ற படத்தையும் இயக்கி வருகிறார்.
இது குறித்து காயத்ரி ரகுராம் கூறுகையில், ‘’நான் சினிமாவுக்கு வந்து 15 வருடங்களாகிறது. குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, ஹீரோயினாக, நடன கலைஞராக, நடன இயக்குனராக எனது சினிமா பயணம் அமைந்தது.
1980களில் சினிமாவில் நடனமாடும் கலைஞர்களின் வாழ்க்கை மிக கடுமையாக இருந்திருக்கிறது. அவற்றில் சிலவற்றை நான் கேள்விப்பட்டிருக்கிறேன். சிலவற்றை பார்த்திருக்கிறேன். அதை சினிமாவாக எடுக்க வேண்டும் என்ற நிஜ சம்பவங்களை கோர்த்து ஸ்கிரிப்ட் எழுதினேன். இதை நல்ல இயக்குனரை கொண்டு படமாக்க நினைத்திருந்தேன். என்னுடைய அப்பா “நீ எழுதின கதையை நீயே இயக்கு” என்று என்னை ஒரு இயக்குனராக்கி பார்க்க ஆசைப்பட்டார். அவர் இப்போது இல்லை. நடன கலைஞர்களின் வாழ்க்கையை இதுவரை யாரும் சினிமாவாக எடுத்ததில்லை. நான் எடுத்து அந்த கலைஞர்களுக்கே அதனை சமர்பிக்கிறேன்’’ என்றார்.
Gayathri Raguram fulfilled her father’s dream!!