ஆப்நகரம்

தரமான, சிறப்பான சம்பவம் செய்த மாஸ்டர் படக்குழு: நடத்துங்க ராசா

இருக்கு இன்று சம்பவம் இருக்கு என்று சாந்தனு பாக்யராஜ் ட்வீட் செய்தது போன்றே நடந்துவிட்டது.

Samayam Tamil 11 Feb 2020, 5:13 pm
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி, சாந்தனு பாக்யராஜ், மாளவிகா மோகனன் உள்ளிட்டோர் நடித்து வரும் மாஸ்டர் படம் பற்றி தான் சமூக வலைதளங்களில் பேச்சாக உள்ளது. காரணம் நெய்வேலியில் படப்பிடிப்பை நடத்த எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம் நடத்தியதும், வருமான வரித்துறையினர் விஜய் வீட்டில் சோதனை நடத்தியதும் தான்.
Samayam Tamil vijay


இந்நிலையில் இன்று மாலை 5 மணிக்கு சம்பவம் இருக்கு என்று கூறி ட்வீட் செய்தார் சாந்தனு. அவரின் ட்வீட்டை பார்த்த விஜய் ரசிகர்கள் குஷியாகிவிட்டார்கள். அண்ணா, நாங்கள் எப்பொழுதுமே ட்விட்டரில் தான் இருக்கிறோம், நல்ல வார்த்தை சொன்னீர்கள் என்று தெரிவித்தனர்.


நான் தனி ஆள் இல்ல: சொல்லாமல் சொல்லி ட்விட்டரை தெறிக்கவிட்ட விஜய்

வழக்கமாக விஜய் ரசிகர்கள் மாஸ்டர் பட அப்டேட் கேட்டு சாந்தனுவை தான் தொந்தரவு செய்வார்கள். சாந்தனுவும் அது தொடர்பாக காமெடியாக வீடியோ எல்லாம் வெளியிட்டிருக்கிறார். இந்நிலையில் அவராக அப்டேட் குறித்து ட்வீட் செய்தது விஜய் ரசிகர்களுக்கு பிடித்துள்ளது.

நெய்வேலியில் நடந்த மாஸ்டர் படப்பிடிப்பு நேற்று முடிந்தது. இதையடுத்து நிச்சயம் அப்டேட் வரும் ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் சாந்தனு இப்படி ட்வீட் செய்தார். சொன்னது போன்று 5 மணிக்கு அப்டேட் வெளியாகியுள்ளது. அதாவது வரும் 14ம் தேதி மாலை 5 மணிக்கு ஒரு குட்டிக் கதை சிங்கிள் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


அண்மையில் நடந்த சம்பவங்களுக்கு பிறகு விஜய் குட்டிக் கதை சொல்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பாட்டாகவே பாடப் போகிறாருங்கணா.

வயித்துல இருக்கிற புள்ளைக்கு ஒன்னும் ஆகலயே: பதறிய ஆல்யா மானசா ரசிகர்கள்

அடுத்த செய்தி

டிரெண்டிங்