ஆப்நகரம்

பேய் வீடான பிக் பாஸ் வீடு : நள்ளிரவில் அலறிய சினேகன்

பிக் பாஸ் வீட்டில் பேய் இருக்கிறது என கவிஞர் சினேகன் நள்ளிரவில் அலறியதால் மற்ற போட்டியாளர்கள் பயத்தில் ஆழ்ந்தனர்.

TOI Contributor 15 Aug 2017, 2:27 am
பிக் பாஸ் வீட்டில் பேய் இருக்கிறது என கவிஞர் சினேகன் நள்ளிரவில் அலறியதால் மற்ற போட்டியாளர்கள் பயத்தில் ஆழ்ந்தனர்.
Samayam Tamil ghost in bigg boss house
பேய் வீடான பிக் பாஸ் வீடு : நள்ளிரவில் அலறிய சினேகன்


உண்மையில் பேய் உள்ளதா என நம்பிவிட வேண்டாம். இந்த வார லக்ஜுரி பட்ஜெட் டாஸ்க் என கூறி பிக் பாஸ் கொடுத்த வேலை தான் இந்த பேய் விளையாட்டு.

பிக் பாஸ் சினேகனிடன் இந்த வீட்டில் பேய் உள்ளது என ஏதேனும் இரு போட்டியாளர்களை நம்ப வைக்க வேண்டும் என கூறினார். இதையடுத்து மற்ற போட்டியாளர்கள் சேர்ந்து பிந்து மாதவி மற்றும் கணேஷ் வெங்கட்ராமனை வீட்டில் பேய் உள்ளது என நம்ப வைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

அதன் படி, வீட்டில் பேய் இருப்பது போல நம்ப வைக்க பேய் சம்பந்தமான பேச்சுக்களை மற்ற போட்டியாளர்கள் அடிக்கடி பேசினர். இதில் உச்சகட்டமாக நள்ளிரவு 2 மணிக்கு பேய் சினேகனின் கழுத்தை நெரிப்பதாக அலறினார்.

இவரின் அலறலால் பிந்து மாதவி, கணேஷ் ஆகியோர் பேய் உள்ளதாக நம்பிவிட்டனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்