ஆப்நகரம்

“முதல்ல நல்ல படங்கள் கொடுங்க, அப்பறம் திருட்டி விசிடியை ஒழிக்கலாம்” : பாக்யராஜ் பளீர்!

“முதல்ல நல்ல படங்கள் கொடுங்க, அப்பறம் திருட்டி விசிடியை ஒழிக்கலாம்” : பாக்யராஜ் பளீர்!

TOI Contributor 12 Apr 2017, 5:04 am
இந்திய சினிமாவின் மிக முக்கிய ஆளுமைகளில் இயக்குநர் கே.பாக்யராஜூம் ஒருவர். இவர் புதுமுகங்கள் நடித்துள்ள ரோஜா மாளிகை எனும் படத்தின் ஆடியோ வெளியீட்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், திருட்டு விசிடியால் சினிமாவுக்கு 10 சதவீதம் தான் பாதிப்பு ஏற்படுகிறது. நல்ல படங்கள் எடுத்தால் நிச்சயமாக மக்கள் தியேட்டருக்கு படம் பார்க்க வருவார்கள் என்றார்.
Samayam Tamil give some good movies after that will ban video piracy says director bakkiyaraj
“முதல்ல நல்ல படங்கள் கொடுங்க, அப்பறம் திருட்டி விசிடியை ஒழிக்கலாம்” : பாக்யராஜ் பளீர்!


சமீபத்தில் வெளியான மாநகரம், 8 தோட்டாக்கள் போன்ற நல்ல கதை அம்சம் உள்ள படங்கள் பெரிய நடிகர்கள் இல்லை என்றாலும் பேசப்படுகிறது. காரணம் நல்ல கதை மற்றும் தயாரிப்பு முறை என்பதால் தான் என்றார். அதே போல் தியேட்டர் உரிமையாளர்கள் பெரிய ஹீரோக்களின் படங்களுக்கு மட்டும் முக்கியத்துவம் தராமல், சிறிய பட்ஜெட் படங்களுக்கும் முன்னுரிமை தரவேண்டும் என்று பாக்கியராஜ் கேட்டுக்கொண்டார். புதிய நடிகர்களின் படங்களுக்கு மாலைக்காட்சியை தியேட்டர்கள் கொடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். புதிய நடிகர்கள் படம் என்றால் காலையில் கூட கூட்டம் வரும், ஆனால் புதிய நடிகர் படங்களை காலை காட்சியில் வெளியிட்டால் கூட்டம் வராது. அதனால் அதற்கேற்றபடி தியேட்டர் உரிமையாளர்கள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்