ஆப்நகரம்

போதையில் இருந்து மீண்ட கவர்ச்சி நடிகை!

கணவர் இறந்த துக்கத்தில் போதைக்கு அடிமையான முன்னாள் கவர்ச்சி நடிகை ஒருவர் அதில் இருந்து மீண்டு வந்திருப்பதாக தெரிவித்துள்ளார்.

TNN 12 Aug 2017, 2:49 pm
கணவர் இறந்த துக்கத்தில் போதைக்கு அடிமையான முன்னாள் கவர்ச்சி நடிகை ஒருவர் அதில் இருந்து மீண்டு வந்திருப்பதாக தெரிவித்துள்ளார்.
Samayam Tamil glamorous actress recovered from drug addiction
போதையில் இருந்து மீண்ட கவர்ச்சி நடிகை!


சாந்தமான அந்த நாயகி 1980களில் தொடங்கி 15 வருடம் தமிழ் மற்றும் தெலுங்கில் கவர்ச்சி நடிகையாக வலம் வந்தவர். இவர் தமிழில் ‘வேட்டைக்காரன்’, ‘மன்னவரு சின்னவரு’, ‘மார்கண்டேயன்’ போன்ற படங்களிலும் ஏராளமான தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். அவர் நடிக்கும்போதே தெலுங்கு நடிகரைகடந்த 1991ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டு குடும்பத்தில் ஐக்கியமனார். அதன்பிறகு நடிப்புக்கு முழுக்குபோட்டார். இவர்களுக்கு இரண்டு மகன்கள்உள்ளனர்.

கடந்த 2013ம் ஆண்டு வெளிப்புற படப்பிடிப்புக்கு சென்ற அவரது கணவர் மாரடைப்பில் காலமானார். இதையடுத்து அந்த நடிகை மனஉளைச்சலுக்குஆளானதாக கூறப்படுகிறது. மேலும் கவலையில் இருந்த அவர் போதைக்கு அடிமையாந்தாக கூறப்படுகிறது.

கடந்தாண்டு உடல் நலம் பாதித்த அவரை அவரது சகோதரிதான் உடன் இருந்து கவனித்துள்ளார். சிகிச்சைக்கு பிறகு போதை பழக்கத்தையும்கைவிட்டுவிட்டாராம்.

இந்த சம்பவம் பற்றி அந்த நடிகையே கூறியதாக வெளியான செய்தியில், என் கணவர் இறந்ததுமே என்ன செய்வதென்று தெரியாமல்அதிர்ச்சியில் இருந்தேன். வேதனையை மறக்க போதைக்கு அடிமையானேன். என் பிள்ளைகளின் எதிர்காலத்தை எண்ணிப்பார்த்து போதை பழக்கத்தைதவிர்த்து விட்டேன். தற்போது என் பிள்ளைகளின் வாழ்வில் கவனம் செலுத்தி வருகிறேன்’’ என்று தெரிவித்துள்ளார்.

glamorous actress recovered from drug addiction

அடுத்த செய்தி

டிரெண்டிங்