ஆப்நகரம்

இயக்குநரின் நாக்கை வெட்டினால் 1 கோடி ரூபாய் சன்மானம் அறிவிப்பு!

இயக்குநரின் நாக்கை வெட்டினால் 1 கோடி ரூபாய் சன்மானம் அறிவிப்பு!

TOI Contributor 27 Nov 2016, 2:04 pm
பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் நடிக்கும் “டாய்லெட் ஏக் பிரேம்கதா” படத்தின் இயக்குநரின் நாக்கை வெட்டினால் 1 கோடி ரூபாய் சன்மானம் வழங்கப்படும் பஞ்சாயத்து தலைவர் ஒருவர் அறிவித்துள்ளார்.
Samayam Tamil godman declares rs 1 crore reward for chopping off directors tongue
இயக்குநரின் நாக்கை வெட்டினால் 1 கோடி ரூபாய் சன்மானம் அறிவிப்பு!

பிரதமர் மோடியின் தூய்மை இந்தியா திட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து நடிகர் அக்ஷய் நடிக்கும் படம் டாய்லெட் ஏக் பிரேம்கதா. இந்தப்படத்தை நீரஜ் பாண்டே இயக்கிவருகிறார். இந்தப்படத்தின் ஷூட்டிங் மதுரா அருகே உள்ள நந்தகாவன் கிராமத்திலும், பர்ஸானா கிராமத்திலும் நடைபெற்றது.

கதைப்படி ஹீரோ நந்தகாவன் கிராமத்தையும், ஹீரோயின் பர்ஸானா கிராமத்தையும் சேர்ந்தவர்கள். ஆனால் கடவுள் கிருஷ்ணனுக்கும் இந்த இரண்டு கிராமங்களுக்கும் தொடர்பு உண்டு. கிருஷ்ணன் நந்தகாவன் பகுதியையும், ராதா பர்ஸானா பகுதியையும் சேர்ந்தவர்கள். இருவருக்கும் திருமணம் நடக்கவில்லை. அதனால் இந்த இரண்டு கிராமங்களுக்கும் திருமண உறவு கிடையாது. அதனால் இந்த திரைப்படத்திற்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் கதையையும், படத்தின் தலைப்பை மாற்ற வேண்டும் என்றும் கூறினர்.
இதனையடுத்து மதுராவை சுற்றியுள்ள 20 கிராமத்தை சேர்ந்த பஞ்சாயத்து தலைவர்கள் தலைமையில் கூட்டம் நடைபெற்றது. இதில் தலைமை பஞ்சாயத்து தலைவர் ஒருவர் படத்தின் இயக்குநரின் நாக்கை வெட்டினால் 1 கோடி ரூபாய் சன்மானம் அளிக்கப்படும் என்று அறிவித்தார். அதனால் வேறு இடத்தில் படப்பிடிப்பு நடத்த படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்