ஆப்நகரம்

ரஜினிக்கா, நானா, இல்லவே இல்லை: பிரபல தெலுங்கு நடிகர் விளக்கம்

ரஜினியின் அண்ணாத்த படத்தில் நடிப்பது குறித்து தெலுங்கு நடிகர் கோபிசந்த் விளக்கம் அளித்துள்ளார்.

Samayam Tamil 20 Apr 2020, 9:20 am
சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் படம் அண்ணாத்த. அந்த படத்தில் மீனா, குஷ்பு, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், சூரி, சதீஷ் உள்ளிட்டோர் நடிக்கிறார்கள்.
Samayam Tamil rajinikanth


முதல்கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டியில் நடைபெற்றது. கொரோனா வைரஸால் ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பிரபல தெலுங்கு நடிகர் கோபிசந்த் தான் ரஜினிக்கு வில்லனாக நடிக்கிறார் என்று தகவல் வெளியானது.

இது குறித்து கோபிசந்த் தெலுங்கு ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். அந்த பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது,

அண்ணாத்த படத்தில் நான் நடிப்பதாக வெளியான தகவலில் உண்மை இல்லை. சிறுத்தை சிவா என் நண்பர் ஆவார். அண்ணாத்த படத்தை முடித்த பிறகு அவர் எனக்காக ஒரு கதை எழுதுவார் என்றார்.

சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் அண்ணாத்த படத்தில் பிரகாஷ்ராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அண்ணாத்த படத்தின் இரண்டாவது மற்றும் மூன்றாவது கட்ட படப்பிடிப்பை கொல்கத்தா மற்றும் புனேவில் நடத்த திட்டமிட்டார் சிவா. ஆனால் அந்த திட்டத்தை கைவிட்டுவிட்டு ஹைதராபாத்திலேயே இரண்டாவது கட்ட படப்பிடிப்பை துவங்கினார்.

அண்ணாத்த படத்திற்கு டி. இமான் இசையமைக்கிறார். முன்னதாக ரஜினி நடிப்பில் வெளியான தர்பார் படம் எதிர்பார்த்த அளவுக்கு போகவில்லை. அதனால் அண்ணாத்த மீது எதிர்பார்ப்பு அதிகம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மதுரை போலீசுடன் சேர்ந்து கொரோனா விழிப்புணர்வு பிரச்சாரம் செய்த சசிகுமார்

அடுத்த செய்தி

டிரெண்டிங்