ஆப்நகரம்

பாலிவுட்டில் தயாராகும் விஜய் மல்லையாவின் வாழ்க்கை வரலாற்றுப் படம்

இந்தியாவின் முக்கிய வங்கிகளில் கடன் பெற்று, பிறகு அதை திருப்ப செலுத்த முடியாமல் வெளிநாட்டிற்கு தப்பிச்சென்ற விஜய் மல்லையாவின் வாழ்க்கை திரைப்படமாக உருவாகிறது.

Samayam Tamil 30 May 2018, 1:21 pm
இந்தியாவின் முக்கிய வங்கிகளில் கடன் பெற்று, பிறகு அதை திருப்ப செலுத்த முடியாமல் வெளிநாட்டிற்கு தப்பிச்சென்ற விஜய் மல்லையாவின் வாழ்க்கை திரைப்படமாக உருவாகிறது.
Samayam Tamil goving-vijay-mallaya
திரைப்படமாகும் விஜய் மல்லையாவின் வாழ்க்கை வரலாறு


திரைப்பட தணிக்கை வாரியத்தின் தலைவராக இருந்து ஓய்வு பெற்றவர் பல்ஹஜ் நிஹ்லானி. ’உத்தா பஞ்சாப்’ என்ற படம் வெளிவருவதற்கு இவர் விதித்த தடைகள் மூலம் இந்தியளவில் பல்ஹஜ் நிஹ்லானி பிரபலமானார்.

ஆனால் ஓய்வு பெற்ற பிறகு இவர் தயாரித்து வெளியிட்ட ’ஜூலி 2’ படம் படுகவர்ச்சியாக தயாராகியிருந்தது. இந்நிலையில், பல்ஹஜ் நிஹ்லானி மீது கடும் விமர்சனங்கள் முன்வைகப்பட்டன.

தற்போது தனது இரண்டாவது படத்திற்கான அறிவிப்பை அவர் வெளியிட்டுள்ளார். அதன்படி பல்ஹஜ்நிஹாலினி கர்நாடகாவை சேர்ந்த பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையாவின் வாழ்க்கையை திரைப்படமாக உருவாக்கவுள்ளார்.

பன்னாட்டு நிறுவனர், கிங்ஃபிஷர் பீர் கம்பெனியின் உரிமையாளர், கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ் சேவையின் முதலாளி என தொழில்துறை உலகின் பன்முகத்தன்மை கொண்ட விஜய் மல்லையா ’ரங்கீலா ராஜா’ என்றும் அறியப்படுகிறார்.

பல்ஹஜ் நிஹ்லானி, திரைப்பட தயாரிப்பாளர்


அதே பெயரில் இப்படத்தை தயாரிப்பதோடு மட்டுமில்லாமல், அதை பல்ஹஜ்நிஹ்லானி இயக்கவுள்ளார். இதில் தொழில்திபர் விஜய் மல்லையாவாக பிரபல பாலிவுட் நடிகர் கோவிந்தா நடிக்கவுள்ளார்.

மேலும் விஜய் மல்லையாவின் காதலிகள், மனைவிகள் மற்றும் அவர் டேட்டிங் செய்த மாடல்கள் போன்ற கதாபாத்திரங்களில் நடிக்க நடிகர்களின் தேர்வு தொடங்கியுள்ளது. பெரும்பாலும் இந்த கதாபாத்திரங்களில் புதுமுகங்கள் நடிக்கலாம் என்று சொல்லப்படுகிறது.

ஆகஸ்டு இறுதியில் தொடங்கும் இந்த படத்திற்கான படப்பிடிப்பு பணிகள் விரைவில் முடிக்கப்பட்டு, இந்தாண்டு இறுதியில் வெளிவரலாம் என பாலிவுட் வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

அடுத்த செய்தி

டிரெண்டிங்