ஆப்நகரம்

ஹீரோவாக அறிமுகமாகும் பழம்பெரும் நடிகரின் பேரன் "ஆரியன்"!

பழம்பெரும் நடிகரான எஸ்.எஸ்.ராஜேந்திரனின் பேரன் ஆரியன் தற்போது ஹீரோவாக ஒரு படத்தில் அறிமுகமாகியுள்ளார்.

Samayam Tamil 29 Mar 2019, 4:45 pm
மறைந்த முன்னாள் நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன் பேரன் எஸ்.எஸ்.ஆர்.ஆரியன். தற்போது இவர் ‘கருத்துக்களை பதிவு செய்’ என்ற படத்தில் ஹீரோவாக அறிமுகமாகிறார். படத்தின் ஹீரோயினியாக உபாஷ்னா ராய் நடிக்கிறார்.
Samayam Tamil karuthukalai-pathivu-sei


‘கருத்துக்களை பதிவு செய்’ படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதியுள்ளார் ராஜசேகர். படத்தை ராகுல் என்பவர் இயக்கி வருகிறார். இவர் ஏற்கெனவே ‘ஜித்தன்2’, ‘1 ஏ.எம்.’ ஆகிய படங்களில் இயக்கியள்ளார். இந்தப் படம் குறித்து இயக்குனர் ராகுல் கூறுகையில், “இது, ஒரு திகில் படம். படத்தின் கரு, ‘பேஸ்புக்’ பற்றியதுதான்.

அதில் அறிமுகமாகி, நண்பர்களாக பழகி, காதலர்களாகி, பின்னர் அவனிடம் அவள் கற்பை இழக்கிறாள். அதோடு அவளை ஒரு அறையில் பூட்டி வைத்து சித்திரவதை செய்யும் கொடூரமானவனிடம் இருந்து தப்பி வந்த பெண், என்ன முடிவெடுக்கிறாள்? என்ன மாதிரியான தண்டனையை அவனுக்கு கொடுத்தாள்? என்பதே கதை. இந்தப் படம் விரைவில் திரைக்கு வரவிருக்கிறது’’ என்றார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்