ஆப்நகரம்

''தமிழ் படம் 2'' விலும் ஜிஎஸ்டி வசனம் நீக்கம்: இதோ அந்த வசனம் இங்கே!!

''சிவா தம்பி போன வாரம் ஆடு வித்ததுக்கு 28% ஜிஎஸ்டி வரி போட்டுட்டாங்க'' என்று மக்கள் பேசும் வசனத்தை தமிழ் படம் 2ல் இருந்து நீக்கிவிட்டதாக செய்தி வெளியாகியுள்ளது.

Samayam Tamil 11 Jul 2018, 4:37 pm
''சிவா தம்பி போன வாரம் ஆடு வித்ததுக்கு 28% ஜிஎஸ்டி வரி போட்டுட்டாங்க'' என்று மக்கள் பேசும் வசனத்தை தமிழ் படம் 2ல் இருந்து நீக்கிவிட்டதாக செய்தி வெளியாகியுள்ளது.
Samayam Tamil தமிழ் படம் 2- விலும் ஜிஎஸ்டி வசனம் நீக்கம்
தமிழ் படம் 2- விலும் ஜிஎஸ்டி வசனம் நீக்கம்


தமிழ் படம் முதல் பாகம் மக்களிடம் அதிக வரவேற்பை பெற்று இருந்தது. இந்தப் படத்தில் வேற்றுமை இல்லாமல் அனைவரையும் கலாய்த்து இருப்பார்கள். 8 ஆண்டுகளுக்குப் பின்னர் தமிழ் படம் 2ம் பாகம் நாளை வெளியாக இருக்கிறது. முதல் படத்தையும் சி.எஸ். அமுதன் இயக்கி இருந்தார். இரண்டாம் பாகத்தையும் சி.எஸ். அமுதன் இயக்க சிவா நடித்துள்ளார். முதல் பாகத்திலும் சிவா நடித்து இருந்தார்.

இரண்டாம் பாகத்தின் டீசர் வெளியாகி யூ டியூப் டிரண்டிங்கில் முதல் இடத்தில் இருந்தது. இவர்கள் அரசியல்வாதிகளை மட்டுமின்றி நடிகர்களையும் கலாய்த்துள்ளனர்.
இந்த நிலையில் இந்தப் படத்தில் இடம் பெற்ற ஜிஎஸ்டி வசனங்களை கட்டிங் போட்டு விட்டனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது. சிவா காரில் வந்து இறங்க, அங்கு காத்திருக்கும் மக்கள், ''வணக்கம் தம்பி, சிவா தம்பி, போன வாரம் ஆடு வித்ததுக்கு 28 சதவீதம் ஜிஎஸ்டி வரி போட்டுட்டாங்க தம்பி. நீங்கதான் எப்படியாவது காப்பாத்தணும்'' என்று கேட்கின்றனர். அதற்கு சிவா, ''கவலைப்படாதீங்க, உங்க அக்கவுன்ட்ல 15 லட்சம் ரூபாய் போட்டு விடுகிறேன்'' என்று கூறுகிறார்.

''மாஸ்டர் கிட்ட சொல்லி உனக்கும் ஒன் குரோர் போடச் சொல்கிறேன்'' என்று காளை மாட்டிடம் சிவா கலாய்க்கிறார். ஆப்பிள் நிறுவனத்தில் வேலை செய்பவர்களுக்கு விசா கிடைக்கவில்லை என்று இளைஞர்கள் கூற, ''நான் இதுபற்றி ஸ்டீவ் ஜாப்சிடம் பேசுகிறேன்'' என்று சிவா கூறுவதும் ஒருவரையும் இந்தப் படத்தில் விட்டு வைக்கவில்லை என்பது மட்டும் தெரிகிறது. ஆனால் இந்த வசனங்கள் அனைத்தும் நீக்கம்.

இந்தப் படம் நாளை வெளியாகவுள்ள நிலையில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. காலா, 2.0 என்று பேசிக் கொண்டு இருந்தவர்கள் தற்போது இந்தப் படத்தின் பக்கம் திரும்பியுள்ளனர். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் முதல் தமிழக துணை முதல்வர் பன்னீர் செல்வம் வரை யாரையும் மிச்சம் வைக்கவில்லை. கலாய்த்துள்ளனர்

அடுத்த செய்தி

டிரெண்டிங்