ஆப்நகரம்

எம்மக்களின் உணர்வுக்களுக்கு மதிப்பளியுங்கள்: ஜி.வி.பிரகாஷ் அரசுக்கு கண்டனம்!

தமிழக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுங்கள் என்று ஜி.வி.பிரகாஷ், தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 24 May 2018, 5:09 pm
தமிழக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுங்கள் என்று ஜி.வி.பிரகாஷ், தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
Samayam Tamil g-v-prakash-kumar-sexy-stills-045


நடிகரும், இசையமைப்பாளருமான ஜி.வி. பிரகாஷ்குமார், ஆரம்பத்திலிருந்தே ஸ்டெர்லைட் போராட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருபவர். இந்நிலையில், நேற்று நடைபெற்ற 100-வது நாள் போராட்டத்தின்போது 9 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கு திரையுலகைச் சேர்ந்த பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் ஜி.வி. பிரகாஷ் தனது கண்டனத்தை இணைய பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

தூத்துக்குடி மக்கள் உயர்நீதிமன்ற வழிகாட்டுதலின்படி போராடி வருகின்றனர். அவர்களின் போராட்டத்தை யாரும் தடுக்க முடியாது. தங்கள் உரிமைக்காக அமைதிப் பேரணி சென்ற மக்களை தடியடி நடத்தி, சுட்டுக்கொல்வது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. மேலும், சில நூறு பேர் கொண்ட உங்களுக்கு முன்னால் நிற்கும் பல்லாயிரக்கணக்கான எம்மக்களின் நியாயமான உணர்வுக்கு மதிப்பு கொடுக்க தவறிவிட்டீர்கள். நீங்கள் வரலாற்று பிழை செய்து விட்டீர்கள்’’ என்று பதிவுட்டுள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்