ஆப்நகரம்

உயிர் கொஞ்சம் கொஞ்சமாக போகிறது: ஜி.வி. பிரகாஷ் பட இயக்குநர் குமுறல்

எடுத்த படத்தை ரிலீஸ் பண்ணத்தான் உயிர் கொஞ்சம் கொஞ்சமாக போகிறது என்று ஜி.வி. பிரகாஷின் ஜெயில் பட இயக்குநர் வசந்தபாலன் தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 18 Feb 2020, 12:06 pm
ஆல்பம், வெயில், அங்காடித் தெரு, அரவான், காவியத் தலைவன் ஆகிய படங்களை இயக்கியவர் வசந்தபாலன். அவர் ஜி.வி. பிரகாஷ் குமாரை ஹீரோவாக வைத்து ஜெயில் என்கிற படத்தை எடுத்தார்.
Samayam Tamil jail


ஜி.வி. பிரகாஷ் நடித்ததோடு மட்டும் அல்லாமல் இசையும் அமைத்திருந்தார். படப்பிடிப்பு கடந்த ஆண்டே முடிந்துவிட்டது. படப்பிடிப்பு முடிந்து பல மாதங்கள் ஆகியும் இன்னும் படம் ரிலீஸான பாடில்லை.

சில பிரச்சனைகளால் படத்தை வெளியிட முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறார் வசந்தபாலன். இந்நிலையில் இது குறித்து அவர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் கூறியிருப்பதாவது,

Vijay ஒரே ட்வீட்டில் விஜய்யை பற்றி தெரியாத 3 விஷயத்தை சொன்ன பார்த்திபன்

ஒரு தயாரிப்பாளரை பிடிக்கிறதுக்கு தலைகீழா நிக்கணும். ஒரு ஹீரோ கிடைக்கிறதுக்கு தலைகீழா நடக்கணும். படப்பிடிப்பு தடையின்றி நடக்க கையில அக்னிசட்டியோட கயித்துல நடக்கணும். இது எல்லாவற்றையும் கூட தாங்கிடலாம். ஆனால் எடுத்த படத்தை ரிலீஸ் பண்ணத்தான் உயிர் கொஞ்சம் கொஞ்சமாக போகிறது என்று தெரிவித்துள்ளார்.

வசந்தபாலனின் போஸ்ட்டை பார்த்த ஜி.வி. பிரகாஷ் ரசிகர்கள் அவருக்கு ஆறுதல் கூறி வருகிறார்கள். வசந்தபாலனின் குமுறலுக்கு பிறகு ஜெயில் படத்தை ரிலீஸ் செய்யும் முயற்சி எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மெக்காவுக்கு சென்ற இடத்தில் அஜித் பட இயக்குநரின் 23 வயது மகன் திடீர் மரணம்

ஜெயில் படம் ஜி.வி. பிரகாஷின் கெரியரில் மறக்க முடியாத படமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. படத்தை எளிமையாகவும், வித்தியாசமாகவும் எடுப்பதற்கு பெயர் போனவர் வசந்தபாலன். அதனாலேயே ஜெயில் மீது எதிர்பார்ப்பு அதிகம் உள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்