ஆப்நகரம்

ஸ்டெர்லைட் ஆலைக்கு அரசாணை வழங்கியிருப்பது தற்காலிக வெற்றி – ஜி.வி.பிரகாஷ்

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பாளர்கள் நடத்திய போராட்டத்தில் கடந்த 22 மற்றும் 23-ம் தேதி போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் பலியாகினர்.

Samayam Tamil 28 May 2018, 11:29 pm
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பாளர்கள் நடத்திய போராட்டத்தில் கடந்த 22 மற்றும் 23-ம் தேதி போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் பலியாகினர்.
Samayam Tamil g-v-prakash-kumar


இன்று காலை துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் அரசு மருத்துமனையில் காயமடைந்தவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போதும், பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதனை அடுத்து இதற்கான நடவடிக்கையில் தமிழக அரசு இறங்கியுள்ளதாக ஓ.பன்னீர் செல்வம் பேட்டியளித்தார்.

இந்நிலையில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட அரசாணை வெளியிடப்பட்டு, ஆலைக்கு சீல் வைக்கப்பட்டது.

இதுகுறித்து இசையமைப்பாளரும், நடிகருமான ஜிவி பிரகாஷ் டுவிட் செய்துள்ளார்.
அதில், “உயிரைக் குடுத்து உரிமை காத்த போராளிகளின் உதிரம் பேசும் எம் மக்கள் வீர வரலாறு...
அரசாணை தற்காலிக வெற்றி ..
நிரந்தரவு தீர்வு நீதிமன்றத்தில் கிடைக்கும் வரை எதுவும் மாறாது , மாறவும் கூடாது..!!” என தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்