ஆப்நகரம்

விவசாயிகளுக்காக ஜி.வி.பிரகாஷ் தொடங்க உள்ள தொண்டு நிறுவனம்

ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது விவசாயிகள் குறித்தும் பெருமளவு விழிப்புணர்வு ஏற்பட்டதாகவே தெரிகிறது.

TNN 25 Jan 2017, 6:48 pm
ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது விவசாயிகள் குறித்தும் பெருமளவு விழிப்புணர்வு ஏற்பட்டதாகவே தெரிகிறது.
Samayam Tamil gv prakash to start ngo for farmers welfare
விவசாயிகளுக்காக ஜி.வி.பிரகாஷ் தொடங்க உள்ள தொண்டு நிறுவனம்


ஜல்லிக்கட்டு போட்டியை தடுத்தால் நாட்டு மாடுகள் அழியும் என்பதால், ஜல்லிக்கட்டு நடத்த நிரந்தர தீர்வு கேட்டு போராட்டம் நடந்தது. இதில் ஜல்லிக்கட்டு போட்டி தீர்வு குறித்து மட்டும் பேசப்பட வில்லை. விவசாயிகள் தற்கொலையை தடுக்கும் விதமாகவும் பேசப்பட்டது.

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக பலரும் தங்களுக்கு இயன்ற வகையில் போராடினர். இந்த வகையில் ஜி.வி பிரகாஷ் கொம்பு வச்ச சிங்கம்டா என்ற தலைப்பில் பாடலையும் வெளியிட்டார். அதோடு ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக பல்வேறு இடங்களில் நடந்த போராட்டத்திலும் கலந்து கொண்டார்.

இந்நிலையில் விவசாயிகளுக்கு உதவும் பொருட்டு, தொண்டு நிறுவன்ம் ஒன்றை தொடங்க உள்ளார் ஜிவி பிரகாஷ். தொண்டு நிறுவனம் தொடங்குவதற்கான அரசின் வழிமுறைகள் முழுவதும் முடித்த பின் இதற்கான முறையான அறிவிப்பை ஜி.வி. வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த தொண்டு நிறுவனத்திற்காக அடுத்த நடிக்க உள்ள படத்தின் முழு ஊதியத்தையும் கொடுப்பதாக தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்