ஆப்நகரம்

சிம்புவுக்காக இசையமைத்த பாடலை தனக்கு பயன்படுத்திக் கொண்ட ஜி.வி.பிரகாஷ்!

இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ், சிம்புவுக்காக இசையமைத்த ஒரு பாடலை தன் படத்தில் பயன்படுத்திக் கொண்டுள்ளார்.

TNN 27 May 2017, 1:20 am
இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ், சிம்புவுக்காக இசையமைத்த ஒரு பாடலை தன் படத்தில் பயன்படுத்திக் கொண்டுள்ளார்.
Samayam Tamil gv prakash used the song which he composed for str
சிம்புவுக்காக இசையமைத்த பாடலை தனக்கு பயன்படுத்திக் கொண்ட ஜி.வி.பிரகாஷ்!


வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்துவரும் படம் ‘வடசென்னை’. இந்தப் படம் மூன்று பாகங்களாக உருவாகவுள்ளது. இந்தப் படத்தில் முதல் நடிப்பதாக பேசப்பட்டவர் நடிகர் சிம்புதான். மேலும் படத்தின் இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டவர் ஜி.வி. பிரகாஷ்.

சில பிரச்னைகளுக்கு இடையில் சிம்பு இடத்தை தனுஷ் நிரப்பிக் கொண்டார். ஜி.வி. பிரகாஷ் இடத்தில் சந்தோஷ் நாராயணன் ஆக்கிரமித்துவிட்டார்.

ஜி.வி. பிரகாஷ் முதலில் ஒப்பந்தம் செய்யப்பட்ட உடனேயே, சிம்புவுக்காக ‘உருட்டு கண்ணால’ என்ற பாடலை உருவாக்கிவிட்டார். பாடலை ஏகாதசி எழுதியுள்ளார். இந்தப் பாடலை, சந்தோஷ் ஹரிஹரன், மோனிஷா, மாளவிகா ஆகியோர் பாடியுள்ளனர்.

ஆனால், தற்போது தனுஷ் நடிப்பதால், தனுஷுக்கும், ஜி.வி.பிரகாஷுக்கும் ஆகாது என்பதால், அந்தப் பாடலை தான் நடிக்கும் ‘செம’ படத்தில் பயன்படுத்தி கொண்டார் நடிகரும், இசையமைப்பாளருமான ஜி.வி.பிரகாஷ்.

Kollywood: GV Prakash Kumar used the song which he composed for STR

அடுத்த செய்தி

டிரெண்டிங்