தமிழ் சினிமாவில் கமர்ஷியல் படங்களை எடுத்து வெற்றிகளை குவித்து வந்தவர் இயக்குனர் ஹரி. சாமி, ஆறு, வேல், சிங்கம் என தொடர்ந்து மாஸ் கமர்ஷியல் ஹிட் படங்களை கொடுத்து வந்த ஹரியின் சமீபத்திய படங்கள் தோல்வியை சந்தித்தன. எனவே அருண் விஜய்யை வைத்து இயக்கியுள்ள யானை படத்தின் மூலம் மீண்டும் வெற்றி பாதைக்கு திரும்பும் முனைப்பில் இருந்தார் ஹரி.
இந்நிலையில் இன்று யானை படம் உலகம் முழுவதும் வெளியாகியள்ளது. ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்ற வரும் யானை படத்தின் மூலம் ஹரி மீண்டும் வெற்றி பாதைக்கு திரும்பியதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
வழக்கமான கமர்ஷியல் குடும்ப கதையாகவே உருவாகியுள்ள யானை படத்தில் அருண் விஜய் தன் மொத்த திறமையையும் வெளிப்படுத்தியுள்ளார். கடந்த சில படங்களாக போலீஸ் திகாரியாகவும், சிட்டி இளைஞனாகவும் நடித்த அருண் விஜய் இப்படத்தில் கிராமத்து இளைஞனாக வாழ்ந்துள்ளார்.
அண்மை செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்
செண்டிமெண்ட் காட்சிகள், சண்டை காட்சிகள், காதல், காமெடி என தன் நவரச நடிப்பையும் வெளிப்படுத்தி கைதட்டலை பெற்றுள்ளார் அருண் விஜய். அதற்கு ஏற்றாற்போல் படத்தின் நாயகியான ப்ரியா பவனி ஷங்கரும் கதையுடன் ஒன்றி நடித்துள்ளார். இவர்களது காதல் காட்சிகள் பலரை ஈர்த்துள்ளது.
மேலும் ராதிகா, சமுத்திரக்கனி, ராமச்சந்திர ராஜு என அனைவரும் வழக்கம் போல் தங்கள் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். யோகி பாபு மற்றும் புகழின் காமெடி சில இடங்களில் ஒர்கவுட் ஆகியுள்ளது. வழக்கம்போல் ஹரி படத்தில் இருக்கும் விறுவிறுப்பான திரைக்கதை இப்படத்திலும் இருக்கின்றது.
ஆனால் சில இடங்களில் அந்த விறுவிறுப்பை குறைக்கும் வகையில் பாடல் காட்சிகளும், காமெடி காட்சிகளும் வந்து செல்கின்றன. மேலும் படத்தில் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு குறைகள் இல்லை என்றாலும் காமெடி காட்சிகளில் சற்று கவனம் செலுத்தி இருக்கலாம் என்றே ரசிகர்கள் கருதுகின்றார்கள்.
ஆனால் ஸ்வாரஸ்யமான் திரைக்கதை, அழுத்தமான கதை மற்றும் நடிகர்களின் சிறப்பான நடிப்பு அந்த சிறிய குறையை மறக்க செய்கின்றது என்றுதான் சொல்லவேண்டும். மொத்தத்தில் யானை திரைப்படத்தின் மூலம் தான் யார் என இயக்குனர் ஹரி நிரூபித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இன்று யானை படம் உலகம் முழுவதும் வெளியாகியள்ளது. ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்ற வரும் யானை படத்தின் மூலம் ஹரி மீண்டும் வெற்றி பாதைக்கு திரும்பியதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
வழக்கமான கமர்ஷியல் குடும்ப கதையாகவே உருவாகியுள்ள யானை படத்தில் அருண் விஜய் தன் மொத்த திறமையையும் வெளிப்படுத்தியுள்ளார். கடந்த சில படங்களாக போலீஸ் திகாரியாகவும், சிட்டி இளைஞனாகவும் நடித்த அருண் விஜய் இப்படத்தில் கிராமத்து இளைஞனாக வாழ்ந்துள்ளார்.
அண்மை செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்
செண்டிமெண்ட் காட்சிகள், சண்டை காட்சிகள், காதல், காமெடி என தன் நவரச நடிப்பையும் வெளிப்படுத்தி கைதட்டலை பெற்றுள்ளார் அருண் விஜய். அதற்கு ஏற்றாற்போல் படத்தின் நாயகியான ப்ரியா பவனி ஷங்கரும் கதையுடன் ஒன்றி நடித்துள்ளார். இவர்களது காதல் காட்சிகள் பலரை ஈர்த்துள்ளது.
மேலும் ராதிகா, சமுத்திரக்கனி, ராமச்சந்திர ராஜு என அனைவரும் வழக்கம் போல் தங்கள் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். யோகி பாபு மற்றும் புகழின் காமெடி சில இடங்களில் ஒர்கவுட் ஆகியுள்ளது. வழக்கம்போல் ஹரி படத்தில் இருக்கும் விறுவிறுப்பான திரைக்கதை இப்படத்திலும் இருக்கின்றது.
ஆனால் சில இடங்களில் அந்த விறுவிறுப்பை குறைக்கும் வகையில் பாடல் காட்சிகளும், காமெடி காட்சிகளும் வந்து செல்கின்றன. மேலும் படத்தில் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு குறைகள் இல்லை என்றாலும் காமெடி காட்சிகளில் சற்று கவனம் செலுத்தி இருக்கலாம் என்றே ரசிகர்கள் கருதுகின்றார்கள்.
ஆனால் ஸ்வாரஸ்யமான் திரைக்கதை, அழுத்தமான கதை மற்றும் நடிகர்களின் சிறப்பான நடிப்பு அந்த சிறிய குறையை மறக்க செய்கின்றது என்றுதான் சொல்லவேண்டும். மொத்தத்தில் யானை திரைப்படத்தின் மூலம் தான் யார் என இயக்குனர் ஹரி நிரூபித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.