ஆப்நகரம்

நடிகை விஜயலட்சுமி தற்கொலை விவகாரம்: ஹரி நாடார் மீண்டும் கைது!

நடிகை விஜயலட்சுமி தற்கொலை விவகாரத்தில் ஹரி நாடார் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Samayam Tamil 19 Jan 2022, 7:29 pm
பணமோசடி விவகாரத்தில் சிக்கி ஏற்கனவே சிறையில் இருக்கும் பனங்காட்டுப் படை கட்சியின் ஹரி நாடரை, நடிகை விஜயலட்சுமியை தற்கொலைக்கு தூண்டிய விவகாரத்தில் திருவான்மியூர் போலீசார் மீண்டும் கைது செய்துள்ளனர்.
Samayam Tamil Vijayalakshmi
Vijayalakshmi


தமிழில் விஜய், சூர்யா, வடிவேலு உள்ளிட்டோர் நடித்து சூப்பர் ஹிட் அடித்த ஃப்ரென்ட்ஸ் படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் பிரபலமானவர் நடிகை விஜயலட்சுமி. அதன்பின்னர் நீண்ட இடைவேளைக்கு பின்னர் ஆர்யா நடித்த பாஸ் என்கிற பாஸ்கரன், ஹிப் ஹாப் தமிழா ஆதி நடித்த மீசைய முறுக்கு உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார் விஜயலட்சுமி.

கடந்த 2020-ஆம் ஆண்டு நடிகை விஜயலட்சுமி அளித்த வாக்குமூலத்தில், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், பனங்காட்டு படை கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஹரிநாடார் மற்றும் சதா ஆகியோர் தன்னை மிரட்டியதாகவும், இதனால் தான் தற்கொலைக்கு முயன்றதாக கூறியிருந்தார். இது தொடர்பாக திருவான்மியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர்.

தம்பிக்கு புத்திமதி கூறிய செல்வராகவன்..?: முடிவில் பிடிவாதமாக இருந்த தனுஷ்!
இந்நிலையில் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில், ஏற்கனவே பண மோசடி வழக்கில் சிறையில் இருந்து வரும் ஹரிநாடாரை கைது செய்ய திருவான்மியூர் போலீசார் பெங்களூரு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளனர்.

இந்த மனு மீதான உத்தரவின் அடிப்படையில் ஹரி நாடாரை கைது செய்து திருவான்மியூர் போலீசார் நாளைய தினம் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்