ஹரீஷ் கல்யாண்
தமிழ் சினிமாவில் சிந்து சமவெளி படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான ஹரீஷ் கல்யாண், பியார் பிரேமா காதல், தாராள பிரபு உள்ளிட்ட படங்களின் மூலம் பெரும் பிரபலமானார். அதற்கு முன்பே பல படங்களில் நடித்திருந்த அவரை ஊர் அறிய செய்தது பிக்பாஸ் நிகழ்ச்சிதான்.
புதிய தொடக்கம்
ஹரீஷ் கல்யாணுக்கு திருமணம் செய்ய அவரது பெற்றோர் பெண் பார்த்து வருவதாக ஏற்கனவே செய்திகள் வெளியான வண்ணம் இருந்தன. இந்நிலையில் தனது மனைவியாகப் போகிறவரின் கையை கோதர்த்தப்படி இருக்கும் போட்டோவை தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்ட ஹரீஷ் கல்யாண் புதிய தொடக்கம் என குறிப்பிட்டிருந்தார்.
ஹரீஷ் கல்யாண் அறிக்கை
இதையடுத்து ஹரீஷ் கல்யாண் திருமணம் செய்து கொள்ள போகும் பெண் யார் என்று கேட்டு வந்தனர் ரசிகர்கள். இந்நிலையில் தனது வருங்கால மனைவியுடன் இருக்கும் போட்டோவை ஷேர் செய்துள்ள ஹரீஷ் கல்யாண், தனது திருமணம் குறித்து ஒரு பக்கத்திற்கு அறிக்கையும் வெளியிட்டுள்ளார். அதில் அவர் தன்னுடைய குழந்தை பருவத்திலிருந்தே எந்த நிபந்தனைகளும் அற்ற அன்பையும் பாசத்தையும் என் வாழ்நாள் முழுவதும் அனுபவிக்கும் அதிர்ஷ்டம் தனக்கு கிடைத்ததாக கூறியுள்ளார்.
Harish Kalyan engaged: 'தாராள பிரபு'வுக்கு விரைவில் டும்டும்டும்... வெளியான கலக்கல் போட்டோ!
திருப்திகரமான பகுதி
தன்னுடைய ஒவ்வொரு சிறிய கனவையும் தன் பெற்றோர் ஊக்குவித்தர்கள் என்றும் அதே போலவே இப்போது நீங்கள் அனைவரும் அன்பையும் ஆதரைவயும் காட்டி வருகிறீர்கள். நீங்கள் அனைவரும் சினிமா உலகில் என் சிறுசிறு வெற்றிகளை பதிக்க உதவியவர்கள். ஒவ்வொரு வெற்றியையும் மைல்கல்லையும் உங்களுடன் பகிர்ந்து கொள்வது எனது பயணத்தின் மிகவும் திருப்திகரமான பகுதியாகும்.
நர்மதா உதயகுமார்
இப்போது மகிழ்ச்சி நிறைந்த இதயத்துடன் எனது தனிப்பட்ட வாழ்க்கையில் ஒரு முக்கியமான பயணத்தை தொடக்கத்தை துவங்க உள்ள மகிழ்ச்சியை உங்களுடன் பகிர்ந்து கொள்ள எழுதுகிறேன். எங்கள் பெற்றோர்கள் குடும்பத்தினர் திரையுலக நண்பர்கள் மற்றும் நலம் விரும்பிகள் அனைவரின் ஆசியுடன் நர்மதா உதயகுமார் உடனான எனது திருமணத்தை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
Mahalakshmi dowry for Ravindar: மகாலட்சுமி வீட்ல எனக்கு கொடுத்தது இதுதான்... போட்டுடைத்த ரவீந்தர்!
இப்போதும் எப்போதும்..
எங்களை நாங்களே புதுப்பித்துக் கொள்ளும் இந்த புதிய வாழ்க்கைப் பயணத்தை துவங்கும் நேரத்தில் இப்போதும் எப்போதும் உங்கள் அனைவரிடமிருந்தும் இரட்டிப்பு ஆசிர்வாதங்களையும் அன்பையும் நாங்கள் எதிர்பார்க்கிறோம் என குறிப்பிட்டுள்ளார். ஹரீஷ் கல்யாணின் இந்த பதிவை பார்த்த நெட்டிசன்கள் அவருக்கு வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்.