ஆப்நகரம்

ப்ரியா பவானிசங்கரின் அடுத்த படமும் நிறைவு! அடுத்தடுத்து ரிலீஸ்?

ப்ரியா பவானிசங்கர், ஹரிஸ் கல்யாணுடன் ஜோடி சேரும் படத்தின் படப்பிடிப்பு முடிந்துள்ளதாக தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 26 Feb 2020, 3:23 pm
ப்ரியா பவானி சங்கர் நடிப்பில் தற்போது மாஃபியா படம் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில், அவரது நடிப்பில் அடுத்தடுத்து படங்கள் தயாராகிக் கொண்டிருக்கின்றன. அதில் ஒன்றுதான் தெலுங்கில் சூப்பர் ஹிட்டான பெல்லி சூப்புலு படத்தின் தமிழ் ரீமேக். இதன் படப்பிடிப்பு நிறைவடைந்துவிட்டதாக ப்ரியா தெரிவித்துள்ளார். அவர் தனது ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளதாவது,
Samayam Tamil priya bhavani shankar



விஜய் தேவரகொண்டா கதாநாயகனாக நடித்த முதல் படம் பெல்லி சூப்புலு. கடந்த 2016ம் ஆண்டு வெளியாகிய இந்த படத்தை தருண் பாஸ்கர் இயக்கியிருந்தார். ரொமாண்டிக் காமெடி வகையைச் சேர்ந்த பெல்லி சூப்புலு படத்தில் விஜய்க்கு ஜோடியாக ரீது வர்மா நடித்திருந்தார்.

இந்த படத்தை தமிழில் விஷ்ணு விஷாலை வைத்து எடுப்பதாக இருந்தது. கௌதம் மேனன் தயாரிப்பில், செந்தில் வீராசாமி இயக்குவதாக இருந்த இந்த படம், பின் ரீமேக் உரிமை கைமாற்றப்பட்டு, ஹரிஸ் கல்யாண் நடிப்பில் உருவாகவுள்ளது.


ஹரிஸ்கல்யாண் ஜோடியாக ப்ரியா பவானி சங்கர் நடிக்கிறார். கார்த்திக் சுந்தர் இயக்குகிறார். இந்த படத்தின் போஸ்ட் புரொடொக்ஷன் பணிகளை விரைவாக முடித்துக் கொண்டு, படத்தை கோடைக்குள் திரைக்கு கொண்டு வர படக்குழு திட்டமிட்டுள்ளதாம்.

ப்ரியா பவானி சங்கருக்கு இந்த வருடம் மிகச் சிறப்பாக அமைந்துள்ளது. ஆரம்பத்தில் வருடத்துக்கு ஒரு படம் என நடித்துக் கொண்டிருந்தவருக்கு, இந்த வருடம் மொத்தம் ஏழு படங்கள். அதில் மாஃபியா ஏற்கனவே வெளியாகி , நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அதில் போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரியாக நடித்திருக்கிறார் ப்ரியா. இதன்பிறகு, எஸ்ஜே சூர்யாவுடன் பொம்மை, பெல்லி சூப்புலு ரீமேக், குருதி ஆட்டம், வான், இந்தியன் 2 உள்ளிட்ட படங்களில் நடிக்கிறார். இதில் சில படங்கள் இன்னும் படப்பிடிப்பு நடந்துகொண்டிருக்கிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்