ஆப்நகரம்

கொரோனாவால் பறிபோன வெற்றி: தாராள பிரபு ஹரிஷ் கல்யாண் சோகமான பதிவு

கொரோனா வைரஸ் காரணமாக தியேட்டர்கள் மூடப்பட்ட நிலையில், சென்ற வாரம் வெளிவந்த தாரள பிரபு படத்தின் நிலைமை பற்றி ட்விட் செய்துள்ளார் ஹரிஷ் கல்யாண்.

Samayam Tamil 17 Mar 2020, 2:14 pm
கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க தமிழ்நாடு முழுவதும் உள்ள தியேட்டர்கள், மால்கள், கோவில்கள் என பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களை மூடிவைக்க அரசு உத்தரவிட்டுள்ளது.
Samayam Tamil Harish Kalyan


இதனால் சென்ற வாரம் திரைக்கு வந்த தமிழ் படங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வெளிவந்த தாராளா பிரபு படம் நல்ல வரவேற்பை பெற்றது. ஆனால் தற்போது கொரோனாவால் தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளது பெரிய வசூல் இழப்பை ஏற்படுத்தியுள்ளது.

வெற்றி பறிபோனது பற்றி ஹரிஷ் கல்யாண் ட்விட்டரில் உருக்கமான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். "கொரோனாவால் உலகமே ஸ்தம்பித்திருக்கிறது. இந்த சமயத்தில் அரசு எடுத்த நடவடிக்கைகள் பாராட்டுக்குரியது. அதனால் நாட்டில் இருக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்க முடியும். ஆனால் சென்ற வாரம் ரிலீஸ் ஆன தாராள பிரபு படம் திரையிடமுடியாமல் போனது துரதிஷ்டவசமானது."

"இந்த படத்திற்காக வந்த உங்கள் அன்பு மற்றும் விமர்சனங்கள் என நெஞ்சை தொட்டது. அதற்காக நன்றி கூறிக்கொள்கிறேன். படம் மீண்டும் ரீ-ரிலீஸ் ஆகும்போது உங்கள் ஆதரவு இருக்கும் என நம்புகிறேன். அனைவரும் பாதுகாப்புடன் இருங்கள்" என ஹரிஷ் கல்யாண் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.


அடுத்த செய்தி

டிரெண்டிங்