ஆப்நகரம்

2 விரலை காட்டி தயாரிப்பாளர்களை கடுப்பாக்கும் கார்த்தி பட ஹீரோயின்?

ரஷ்மிகா மந்தனா தன் சம்பளத்தை உயர்த்திவிட்டது குறித்து தான் பரபரப்பாக பேசப்படுகிறது.

Samayam Tamil 17 Nov 2020, 3:24 pm
கிரிக் பார்ட்டி கன்னட படம் மூலம் நடிகையான ரஷ்மிகா மந்தனா தற்போது தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருக்கிறார். தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவுடன் சேர்ந்து ரஷ்மிகா நடித்த சரிலேரு நீக்கெவரு படம் கடந்த ஜனவரி மாதம் வெளியாகி ஹிட்டானது.
Samayam Tamil rashmika mandanna


இதையடுத்து ரஷ்மிகா அல்லு அர்ஜுனின் புஷ்பா படத்தில் நடித்து வருகிறார். அவர் கைவசம் மேலும் ஒரு தெலுங்கு படம் இருக்கிறது. பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி ஜோடியாக சுல்தான் படத்தில் நடித்துள்ளார் ரஷ்மிகா. சுல்தான் படப்படிப்பு அண்மையில் தான் முடிந்தது. அந்த படம் பொங்கலுக்கு ரிலீஸாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சுல்தான் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமாகிறார் ரஷ்மிகா.

ரஷ்மிகா நடிக்கும் படங்கள் தொடர்ந்து வெற்றி பெற்று வருகின்றது. இதனால் அவர் தனது சம்பளத்தை உயர்த்தியுள்ளாராம்.

ரூ. 1 கோடி சம்பளம் வாங்கி வந்த ரஷ்மிகா தற்போது ரூ. 2 கோடி கேட்பதாக தெலுங்கு மீடியாக்கள் தெரிவித்துள்ளன. கடந்த ஆண்டு ரூ. 60 லட்சம் முதல் ரூ. 80 லட்சம் வரை சம்பளம் வாங்கி வந்த ரஷ்மிகா தற்போது ரூ. 2 கோடி வாங்குகிறாராம்.

கொரோனா வைரஸ் பிரச்சனையால் தயாரிப்பாளர்கள் பலர் நஷ்டம் அடைந்துள்ளனர். அவர்களின் நிலைமையை புரிந்து கொண்டு நடிகர்கள், நடிகைகள் தங்களின் சம்பளத்தை குறைத்துள்ளனர். இந்நிலையில் ரஷ்மிகா தன் சம்பளத்தை ரூ. 1 கோடி உயர்த்தியுள்ளது தயாரிப்பாளர்களை எரிச்சல் அடைய வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

காசு, பணம் இருந்து என்ன செய்ய: ரஷ்மிகாவை பார்த்து பாவப்படும் ரசிகர்கள்

லாக்டவுன் நேரத்தில் ரஷ்மிகா ட்விட்டர், இன்ஸ்டாகிராமில் படு ஆக்டிவாக இருந்தார். ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு எல்லாம் பதில் அளித்து வந்தார். படித்த காலத்தில் விடுமுறை நாட்களின்போது தான் வீட்டில் இருக்க நேரம் கிடைத்தது. தற்போது லாக்டவுனால் மாதக் கணக்கில் வீட்டில் இருப்பது மகிழ்ச்சியாக உள்ளது என்று ரஷ்மிகா முன்பு தெரிவித்தார்.

மேலும் தான் ஒர்க்அவுட் செய்யும் புகைப்படங்கள், வீடியோக்களை தொடர்ந்து வெளியிட்டு வருகிறார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்