ஆப்நகரம்

தயாரிப்பாளர்களை ரிஸ்க் எடுக்கவைக்க விரும்பாத விஜய் சேதுபதி!

தன்னை வைத்து தயாரிக்கும் பட தயாரிப்பாளர்களை ரிஸ்க் எடுக்க விரும்பாமல் படத்தை தாமே தயாரிக்கிறார் நடிகர் விஜய் சேதுபதி.

TNN 6 Sep 2017, 5:59 pm
தன்னை வைத்து தயாரிக்கும் பட தயாரிப்பாளர்களை ரிஸ்க் எடுக்க விரும்பாமல் படத்தை தாமே தயாரிக்கிறார் நடிகர் விஜய் சேதுபதி.
Samayam Tamil high budget movies i will manage myself says vijay sethupahi
தயாரிப்பாளர்களை ரிஸ்க் எடுக்கவைக்க விரும்பாத விஜய் சேதுபதி!


நடிகர் விஜய் சேதுபதி தற்போது ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ இயக்குனர் கோகுல் இயக்கத்தில் ‘ஜுங்கா’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் ஆங்கில பட வில்லன் போன்று ஸ்டைலிஷ் டானாக நடிக்கவுள்ளார். படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ‘வனமகன்’ நடிகை சயிஷா நடிக்கிறார்.

இந்தப் படத்தின் கதையைக் கேட்டு ஓகே சொன்ன விஜய் சேதுபதி, பட்ஜெட்டைக் கேட்டதும், ‘‘ இந்தப் படத்தை நானே தயாரிக்கிறேன்’’ என்று சொல்லிவிட்டாராம். காரணம், பட்ஜெட் தொகை 20 கோடி ரூபாய். இதுவரை இவ்வளவு பெரிய பட்ஜெட்டில் விஜய் சேதுபதி நடித்ததில்லையாம். ஆகையால் இந்தப் படத்திற்காக மற்ற தயாரிப்பாளர்களை ரிஸ்க் எடுக்க வைக்க வேண்டாம் என நினைத்து படத்தை தானே தயாரிக்கிறாராம்.

விஜய் சேதுபதியின் இந்த பெரிய மனசு யாருக்குத்தான் வரும் என்று கோடம்பாக்கத்தில் ஒரு பரபரப்பு பேச்சு அடிபட்டுவருகிறது. படப்பிடிப்பு பிரான்ஸில் 60 சதவீதமும், சென்னை, தூத்துக்குடி, ராமநாதபுரத்தில் 40 சதவீதமும் நடைபெற உள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்