ஆப்நகரம்

ஒரு படத்தை பலருக்கு விற்ற பிரபல பெண் தயாரிப்பாளர் கைது!

ஒரு படத்தின் உரிமையை பல பேருக்கு விற்று பண மோசடி செய்த பிரபல பெண் தயாரிப்பாளர் பிராண அரோரா கைது செய்யப்பட்டார்.

Samayam Tamil 11 Dec 2018, 4:45 pm
ஒரு படத்தின் உரிமையை பல பேருக்கு விற்று பண மோசடி செய்த பிரபல பெண் தயாரிப்பாளர் பிராண அரோரா கைது செய்யப்பட்டார்.
Samayam Tamil 49


அக்‌ஷய்குமார், சோனம் கபூர், ராதிகா ஆப்தே உட்பட பலர் நடிப்பில் வெளியான இந்தி படம் ‘பேட்மேன்’.இந்தப் படம் மிகவும் வெற்றிகரமாக ஓடியது.இந்த படத்தை பிரபல இந்தி பெண் தயாரிப்பாளரான பிரர்ண அரோரா தயாரித்து இருந்தார். அக்‌ஷய்குமார் நடித்த ‘ரஸ்டம்’, ‘ஏக் பிரேம் கதா’, ‘பரி’ ஆகிய படங்களை கிரி அர்ஜ்என்டர்டெயின்மென்ட் பட நிறுவனம் மூலம் அர்ஜுன் என். கபூருடன் இணைந்து தயாரித்து இருந்தார் பிராண அரோரா.

இவர் ஒரே படத்தின் உரிமையை பலருக்கு விற்று மோசடி செய்ததாக புகார்கள் எழுந்தன. வாசு பக்னான் என்பவரிடம் பட உரிமையை தருவதாக ரூ.32 கோடி வாங்கியதாக கூறப்பட்டது. இதுபோல் மேலும் பலரிடம் கோடிக்கணக்கில் பணம் வாங்கியதாக தெரியவந்தது.

இதுகுறித்து போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். வாசு பக்னானிடம் பணம் வாங்கி ஏமாற்றியது உறுதியானது. இதைத்தொடர்ந்து பிரர்ண அரோனாவை போலீசார் கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். பிரர்ண அரோனாவை காவலில் வைத்து விசாரிக்க கோர்ட்டு அனுமதி வழங்கியது.

பிரபல தயாரிப்பாளர் அரோராவின் கைது நடவடிக்கை பாலிவுட் சினிமாவில் மிகவும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்