ஆப்நகரம்

பிற்போக்காளர்கள் எண்ணம் ஒருபோதும் ஈடேறப்போவதில்லை: திருமாவளவனுக்கு பா.ரஞ்சித் ஆதரவு

திருமாவளவனுக்கு ஆதரவாக இயக்குநர் பா.ரஞ்சித் குரல் கொடுத்துள்ளார்.

Samayam Tamil 20 Nov 2019, 10:57 am
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் சமீபத்தில் புதுச்சேரியில் மகளிர் இயக்கம் சார்பில் நடைபெற்ற சனாதன கல்விக் கொள்கை எதிர்ப்பு மாநாட்டில் கலந்து கொண்டார். அப்போது அவர் இந்து கோவில் அமைப்பை விமர்சித்துப் பேசினார்.
Samayam Tamil பிற்போக்காளர்கள் எண்ணம் ஒருபோதும் ஈடேறப்போவதில்லை: திருமாவளவனுக்கு பா.ரஞ்சித் ஆதரவு
பிற்போக்காளர்கள் எண்ணம் ஒருபோதும் ஈடேறப்போவதில்லை: திருமாவளவனுக்கு பா.ரஞ்சித் ஆதரவு


திருமாவளவனின் இந்த பேச்சுக்கு இந்து அமைப்புகள் தொடர்ந்து கண்டனம் தெரிவித்து வருகின்றன. மேலும் அவர் மீது காவல் நிலையத்தில் இது தொடர்பாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து அவர் வருத்தம் தெரிவித்தும் இன்னும் அந்த பிரச்சனை தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

அருண் விஜய் பிறந்தநாளுக்கு லைகா கொடுத்த இன்ப அதிர்ச்சி

இந்த நிலையில் திருமாவளவனுக்கு ஆதரவாக இயக்குநர் பா. ரஞ்சித் ட்வீட் செய்துள்ளார். அதில், 'ஒரு கருத்தையொற்றி எதிர் வைக்கப்படும் விமர்சனம் விவாதத்தை ஏற்படுத்த வேண்டும். ஆனால், இங்கு விமர்சனங்களாக வசைகள், தனிமனிதத் தாக்குதல்கள் மற்றும் அவதூறு நிகழ்த்தப்படுவது இவர்களுக்குப் பண்பாடாகவே இருக்கிறது.



அண்ணன் திருமா அவர்களைத் தரம் தாழ்த்தும் பிற்போக்காளர்கள் எண்ணம் ஒருபோதும் ஈடேறப்போவதில்லை!' என்று குறிப்பிட்டுள்ளார். பா.ரஞ்சித்தின் ட்வீட்டை சிலர் ஆதரித்தும், சிலர் விமர்சித்தும் வருகின்றனர்.

ஆர்.ஜே. பாலாஜி படத்திற்காக 8 ஆண்டுகள் கழித்து விரதம் இருக்கும் நயன்தாரா

மேலும் நடிகையும், பாஜக ஆதரவாளருமான காயத்ரி ரகுராம், திருமாவளவனுக்கு எதிராக சர்ச்சைக்குரிய ட்வீட்டுகளை வெளியிட்டு வந்தார். அவை விதிகளை மீறியது என்பதால் அவரது ட்விட்டர் பக்கம் முடக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்