விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா படத்திற்கு பிறகு சிம்பு, கெளதம் மேனன் மூன்றாவது முறையாக இணையும் படத்திற்கு 'வெந்து தணிந்தது காடு' என தலைப்பிடப்பட்டுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு அண்மையில் துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
வருண் நடிப்பில் 'ஜோஷ்வா' படத்தை இயக்கி முடித்துள்ளார் கெளதம் மேனன். இந்தப்படத்தை தொடர்ந்து தற்போது சிலம்பரசன் நடிப்பில் 'வெந்து தணிந்தது காடு' படத்தை இயக்கி வருகிறார். இந்த இரண்டு படங்களையுமே வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் சார்பாக ஐசரி கணேஷ் தயாரித்து வருகிறார். விண்ணைத்தாண்டி வருவாயா படத்தை தொடர்ந்து இரண்டாவது முறையாக சிம்பு, கெளதம் கூட்டணிக்கு இசையமைக்கவுள்ளார் ஏ.ஆர்.ரஹ்மான்.
சிம்பு, கெளதம் மேனன் இணையும் படத்திற்கு ஆரம்பத்தில் நதிகளிலே நீராடும் சூரியன் என்ற தலைப்பிட்டிருந்தனர். அதன்பின்னர் படத்தின் டைட்டிலை மாற்றி பாரதியாரின் கவிதை வரிகளான 'வெந்து தணிந்தது காடு' என பெயர் வைத்தனர். அத்துடன் படத்தின் பர்ஸ்ட் லுக்கும் வெளியானது. அதில் சிம்புவின் லுக் பலருக்கு ஆச்சரியத்தை கொடுத்தது.
'வெந்து தணிந்தது காடு' படத்தில் இதுவரை ஏற்று நடித்திடாத கதாபாத்திரத்தில் சிம்பு நடிக்க உள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த படத்திற்காக 15 கிலோ எடையை குறைத்து மெனக்கெட்டு நடித்து வருகிறார் சிம்பு. அவரின் அம்மா கதாபாத்திரத்தில் ராதிகா சரத்குமார் நடிக்கிறார்.
இந்நிலையில் 'பாஸ்ட் அண்ட் ஃபுரியஸ் 5', 'தி ஸ்பை நெக்ஸ்ட் டோர்' உள்ளிட்ட பல்வேறு ஹாலிவுட் படங்களின் சண்டைக் காட்சிகளில் பணிபுரிந்த லீ விட்டேகர் தற்போது 'வெந்து தணிந்தது காடு' படத்தின் சண்டைக் காட்சிகளிலும் பணிபுரிந்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், 'நேற்றிரவு மும்பையில் நடந்த படப்பிடிப்போடு முதல் கட்டப் படப்பிடிப்பு முடிந்தது. கெளதம் மேனனோடும் அதீத திறமை வாய்ந்த நடிகர்களோடும், இந்தச் சிறப்பான குழுவோடும் பணியாற்றியது அற்புதமான, நேர்மறை சிந்தனையூட்டும் அனுபவமாக இருந்தது. இந்த இனிய மனிதர்களுடன் அடுத்தக்கட்ட படப்பிடிப்பை எதிர்நோக்கியுள்ளேன். மிக்க நன்றி' என குறிப்பிட்டுள்ளார்.
வருண் நடிப்பில் 'ஜோஷ்வா' படத்தை இயக்கி முடித்துள்ளார் கெளதம் மேனன். இந்தப்படத்தை தொடர்ந்து தற்போது சிலம்பரசன் நடிப்பில் 'வெந்து தணிந்தது காடு' படத்தை இயக்கி வருகிறார். இந்த இரண்டு படங்களையுமே வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் சார்பாக ஐசரி கணேஷ் தயாரித்து வருகிறார். விண்ணைத்தாண்டி வருவாயா படத்தை தொடர்ந்து இரண்டாவது முறையாக சிம்பு, கெளதம் கூட்டணிக்கு இசையமைக்கவுள்ளார் ஏ.ஆர்.ரஹ்மான்.
சிம்பு, கெளதம் மேனன் இணையும் படத்திற்கு ஆரம்பத்தில் நதிகளிலே நீராடும் சூரியன் என்ற தலைப்பிட்டிருந்தனர். அதன்பின்னர் படத்தின் டைட்டிலை மாற்றி பாரதியாரின் கவிதை வரிகளான 'வெந்து தணிந்தது காடு' என பெயர் வைத்தனர். அத்துடன் படத்தின் பர்ஸ்ட் லுக்கும் வெளியானது. அதில் சிம்புவின் லுக் பலருக்கு ஆச்சரியத்தை கொடுத்தது.
'வெந்து தணிந்தது காடு' படத்தில் இதுவரை ஏற்று நடித்திடாத கதாபாத்திரத்தில் சிம்பு நடிக்க உள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த படத்திற்காக 15 கிலோ எடையை குறைத்து மெனக்கெட்டு நடித்து வருகிறார் சிம்பு. அவரின் அம்மா கதாபாத்திரத்தில் ராதிகா சரத்குமார் நடிக்கிறார்.
இந்நிலையில் 'பாஸ்ட் அண்ட் ஃபுரியஸ் 5', 'தி ஸ்பை நெக்ஸ்ட் டோர்' உள்ளிட்ட பல்வேறு ஹாலிவுட் படங்களின் சண்டைக் காட்சிகளில் பணிபுரிந்த லீ விட்டேகர் தற்போது 'வெந்து தணிந்தது காடு' படத்தின் சண்டைக் காட்சிகளிலும் பணிபுரிந்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், 'நேற்றிரவு மும்பையில் நடந்த படப்பிடிப்போடு முதல் கட்டப் படப்பிடிப்பு முடிந்தது. கெளதம் மேனனோடும் அதீத திறமை வாய்ந்த நடிகர்களோடும், இந்தச் சிறப்பான குழுவோடும் பணியாற்றியது அற்புதமான, நேர்மறை சிந்தனையூட்டும் அனுபவமாக இருந்தது. இந்த இனிய மனிதர்களுடன் அடுத்தக்கட்ட படப்பிடிப்பை எதிர்நோக்கியுள்ளேன். மிக்க நன்றி' என குறிப்பிட்டுள்ளார்.