ஆப்நகரம்

Hombale Films: மூவாயிரம் கோடி முதலீடு: 'கே.ஜி.எஃப்' நிறுவனத்தின் மெஹா திட்டம்..!

தனது ஐந்து ஆண்டு கால திட்டம் குறித்து பிரபல ஹோம்பாலே பிலிம்ஸ் நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

Authored byஆஷிக் முகமது | Samayam Tamil 3 Jan 2023, 8:47 am
‘கேஜிஎஃப் 1 மற்றும் 2 பாகத்தை இயக்கி பிரபல நிறுவனம் ஹோம்பாலே பிலிம்ஸ். அண்மையில் ரிஷப் ஷெட்டி நடிப்பில் வெளியாகி பான் இந்தியா அளவில் பிரம்மாண்ட வெற்றியை பெற்ற ‘காந்தாரா’ படத்தையும் தயாரித்தது இந்த நிறுவனம். இந்நிலையில் ஹோம்பாலே பிலிம்ஸ் நிறுவனம் அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
Samayam Tamil கேஜிஎப்
கேஜிஎப்


பிரம்மாண்டமான பட்ஜெட் படங்களை தயாரித்து, பான் இந்திய படைப்பாக அளித்து ரசிகர்களின் மத்தியில் பிரபலமான தயாரிப்பு நிறுவனமாக திகழ்வது ஹோம்பாலே பிலிம்ஸ். இந்த நிறுவனத்தின் உரிமையாளரான தயாரிப்பாளர் விஜய் கிரகந்தூர், ரசிகர்களுக்கு புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்து, தங்களது அடுத்தடுத்த திட்டம் குறித்த அறிவிப்பையும் வெளியிட்டுள்ளனர்.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

இது தொடர்பாக ஹோம்பாலே பிலிம்ஸ் நிறுவனம் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், "சினிமா என்பது பழங்காலத்திலிருந்தே அனைவராலும் பார்க்கப்பட்டு, பாராட்டப்பட்டு மற்றும் மக்களோடு கலந்து வாழ்ந்து வருகிறது. நம் வாழ்வில் கஷ்டமான நேரங்களில் கூட அதிலிருந்து விடுபட சினிமாவுக்கு பெரிய பங்கு இருக்கிறது.

மேலும் நமது கலாச்சாரம், பாரம்பரியம் மற்றும் வரலாற்றின் நமது அடையாளத்தை உலகிற்கு பெரிய அளவில் வெளிப்படுத்தி வருகிறோம். பன்முகத்தன்மை கொண்ட நாடான இந்தியா, நாட்டின் இளைஞர்களிடம் இருக்கும் திறமையை வெளிக்கொண்டு வர சினிமா ஒரு பரந்த வாய்ப்பாக நமக்கு வழங்குகிறது.

KH 234: விஜய், அஜித்தை தொடர்ந்து ஆண்டவருடன் இணையும் திரிஷா: இதென்ன புது ட்விஸ்ட்.!

இந்த ஆண்டில் அழியாத தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய அழுத்தமான படங்களைத் தயாரிப்பதாக உறுதியளிக்கிறோம். இந்த ஆர்வத்தை மனதில் கொண்டு, பொழுதுபோக்கு துறையில் நிலையான வளர்ச்சிக்காக வரும் 5 ஆண்டுகளில் ரூ.3,000 கோடியை முதலீடு செய்ய உறுதியளிக்கிறோம்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Ajith Kumar: 'ஏகே 62' வேலைகளை ஆரம்பித்த விக்கி: வெறித்தனமான அப்டேட்.!

ஹோம்பாலே பிலிம்ஸ் நிறுவனம் தற்போது ‘பாகுபலி’ புகழ் பிரபாஸ் மற்றும் நடிகை ஸ்ருதிஹாசன் நடிப்பில், ‘கே ஜி எஃப்’ புகழ் இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் உருவாகி வரும் ‘சலார்’ படத்தையும், கீர்த்தி சுரேஷ் கதையின் நாயகியாக நடித்து வரும் ‘ரகு தாத்தா’ படத்தையும், இயக்குநரும், நடிகருமான பிரித்விராஜின் ‘டைசன்’ எனும் படத்தையும், ‘சார்லி 777’ புகழ் ரக்ஷித் ஷெட்டி இயக்கத்தில் ‘ரிச்சர்ட் ஆண்டனி’ என்ற படத்தையும் தயாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

எழுத்தாளர் பற்றி
ஆஷிக் முகமது
நான் ஆசிக் முகமது. ஊடகத்துறையில் கடந்த நான்கு வருடமாக பணியாற்றி வருகிறேன். எழுத்தின் மீதிருந்த ஆர்வத்தால் இந்த துறையை தேர்ந்தெடுத்தேன். அரசியல், கவிதை, சினிமாவில் ஆர்வம் கொண்ட நான், தற்போது டைம்ஸ் ஆப் இந்தியாவின் சமயம் தமிழ் இணைய ஊடகத்தில் சினிமா சம்பந்தமான கட்டுரைகள் எழுதி வருகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்