ஆப்நகரம்

யாமிருக்க பயமே 2 உருவாகிறது: ஆனால் ஒரு ட்விஸ்ட்

மிகப்பெரிய வெற்றி பெற்ற யாமிருக்க பயமே படத்தின் இரண்டாம் பாகத்தின் முதற்கட்ட பணிகள் தற்போது நடந்துவருகிறது.

Samayam Tamil 12 May 2020, 1:04 pm
கிருஷ்ணா, ஓவியா, ரூபா மஞ்சரி, கருணாகரன், யோகிபாபு என பலர் நடித்திருந்த படம் யாமிருக்க பயமே. ஹாரர் காமெடி படமான இது விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. வாடா வாடா பண்ணி மூஞ்சி வாயா உட்பட படத்தில் வரும் பல காமெடி காட்சிகள் நம்மை விழுந்து விழுந்து சிரிக்க வைத்தன.
Samayam Tamil Yaamirukka Bayamey


டீகே இயக்கத்தில் உருவான இந்த படத்தினை ஆர்எஸ் இன்போடெயின்மென்ட் எல்ரெட் குமார் தயாரித்திருந்தார். அதற்கு முன்பு அவர் சிம்புவின் விண்ணைத்தாண்டி வருவாயா, ஜீவா நடிப்பில் கோ ஆகிய படங்களை தயாரித்திருந்தார்.

யாமிருக்க பயமே வெளிவந்து ஆறு வருடங்கள் ஆகும் நிலையில் அது பற்றி ட்விட்டரில் பதிவிட்டிருந்த எல்ரெட் குமார், "ஒரு படத்தின் வெற்றி என்பது ரசிகர்களுக்கு படம் பிடித்து, தங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரை தியேட்டருக்கு அழைத்து வருவது தான். யாமிருக்க பயமே வெற்றிக்கு அது தன் காரணம்" என கூறி இருந்தார்.

இரண்டாம் பாகத்தை எடுக்கும் பணிகள் நடப்பதாக தயாரிப்பாளர் முன்பே கூறியிருந்தார். இந்நிலையில் தற்போது அதற்கான முதற்கட்ட பணிகள் வேகமாக நடந்துவருகிறது.

இரண்டாம் பாகத்தை பெரிய பட்ஜெட்டில் எடுக்க திட்டமிடப்பட்டுள்ளது என கூறப்படுகிறது. டீகே தான் இந்த படத்தை இயக்குகிறார், ஆனால் முதல் பாகத்தில் நடித்த கிருஷ்ணா, ஓவியா உட்பட யாரும் இரண்டாம் பாகத்தில் நடிக்க போவதில்லை. புதிதாக நடிகர் நடிகைகளை நடிக்க வைக்க உள்ளனர். அதற்காக பல டாப் நடிகர்களிடம் பேச்சு வார்த்தை நடந்து வருகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்