ஆப்நகரம்

இளையராஜாவை இழிவாக பேசலாமா கங்கை அமரன்? சௌந்தர்யன் வருத்தம்

இளையராஜாவைப் பற்றி கங்கை அமரன் பேசிய வார்த்தைகள் என்னைப் போன்ற ரசிகர்களை வருத்தத்தில் ஆழ்த்திவிட்டது என்று இசையமைப்பாளர் சௌந்தர்யன் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

TOI Contributor 21 Mar 2017, 5:48 pm
இளையராஜாவைப் பற்றி கங்கை அமரன் பேசிய வார்த்தைகள் என்னைப் போன்ற ரசிகர்களை வருத்தத்தில் ஆழ்த்திவிட்டது என்று இசையமைப்பாளர் சௌந்தர்யன் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.
Samayam Tamil how can gangai amaran insult ilaiyaraja asks soundaryan
இளையராஜாவை இழிவாக பேசலாமா கங்கை அமரன்? சௌந்தர்யன் வருத்தம்


தன்னுடைய பாடல்களை மேடையில் பாடக்கூடாது என்று எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு இளையராஜா அனுப்பிய நோட்டீஸ் விவகாரம் தமிழ் சினிமா உலகில் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் பற்றி அண்மையில் கங்கை அமரனிடன் ஒரு தனியார் தொலைக்காட்சி செய்தி பிரிவில் உள்ளவர்கள் கேட்க, அதற்கு கங்கை அமரன், ‘‘இதற்கு மேல இளையராஜா சம்பாதிச்சு என்ன பண்ணப்போறாரு, சாப்பிடுவது ரெண்டு இட்லி, ரெண்டு சப்பாத்திதான், ஏன் இன்னும் ஆசை’’ என கூறியிருந்தார்.

இதற்கு பதில் அளித்துள்ள பிரபல இசையமைப்பாளர் சௌந்தர்யன், ‘’இளையராஜா இசையில் கங்கை அமரன் எழுதி இருந்த முதல் பாடல் செந்தூரப்பூவே. அந்தப் பாடல் ஹிட்டடித்த பிறகுதான் கங்கை அமரன் உலகத்துக்கு தெரிந்தார். உலகமே வியக்கும் இசைஞானியை இவர் அப்படி இழிவாக பேசலாமா? இப்படிப்பட்ட அண்ணனை நினைத்து அவர் பெருமைப்பட வேண்டும். தம்பியுடையான் படைக்கு அஞ்சான் என்பார்கள். ஆனால் இவர் ஆள் சேர்த்து வந்து அண்ணனை அடிப்பார் போலிருக்கு. இவரது இந்த வார்த்தைகள் என்னைப் போன்ற பல ரசிகர்களை வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது’’ என்று தெரிவித்துள்ளார்.

how can gangai amaran insult ilaiyaraja asks soundaryan?

அடுத்த செய்தி

டிரெண்டிங்