ஆப்நகரம்

திருமண செய்தியை பார்த்து கீர்த்தி என்ன செய்தார்?: அம்மா மேனகா பதில்

தனக்கு பெரிய இடத்து பையனுடன் திருமணம் என்று வெளியான தகவல் அறிந்து கீர்த்தி சுரேஷ் என்ன செய்தார் என அவரின் அம்மா மேனகா தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 7 Apr 2020, 4:04 pm
தனக்கு பெரிய இடத்து பையனுடன் திருமணம் என்று வெளியான தகவல் அறிந்து கீர்த்தி சுரேஷ் என்ன செய்தார் என அவரின் அம்மா மேனகா தெரிவித்துள்ளார்.
Samayam Tamil how does keerthy suresh react to wedding rumour menaka
திருமண செய்தியை பார்த்து கீர்த்தி என்ன செய்தார்?: அம்மா மேனகா பதில்



மேனகா

கீர்த்தி சுரேஷுக்கும் பாஜகவை சேர்ந்த முக்கிய பிரமுகரின் மகனுக்கும் விரைவில் திருமணம் என்கிற தகவல் தீயாக பரவியது. இது குறித்து அறிந்த கீர்த்தி சுரேஷோ, தனக்கு தற்போதைக்கு திருமணம் எல்லாம் இல்லை என்று விளக்கம் அளித்தார். இந்நிலையில் திருமண வதந்தி குறித்து கீர்த்தியும் அம்மாவும், நடிகையுமான மேனகா பேட்டி அளித்துள்ளார்.

கீர்த்தி

கீர்த்தி பற்றி மேனகா கூறியதாவது, திருமண செய்தியில் உண்மை இல்லை. உனக்கு கல்யாணமாமே என்று நான் கீர்த்தியிடம் கூறியபோது அவர் சிரித்தார். இந்த நேரத்திலும் மக்களுக்கு என்னை இது நினைவூட்டும் என்றார் கீர்த்தி. திருமண வதந்தியால் அவர் டென்ஷன் ஆகவில்லை. ரொம்ப கூலாக இருந்தார். ஊரடங்கின்போது கீர்த்தி சென்னையில் சிக்கிக் கொண்டார் என்றார்.

சென்னை

கீர்த்தி தன் தோழிகள் மூன்று பேருடன் சென்னையில் உள்ளார். அவர் இங்கு வர வேண்டியது. ஆனால் அவர் நடித்துள்ள மிஸ் இந்தியா படத்திற்கு சில பேட்ச் ஒர்க் இருந்ததால் அங்கு தங்க வேண்டியதாகிவிட்டது. அந்த நேரம் பார்த்து ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. கீர்த்தி தானே சமைத்து சாப்பிடுகிறார். பூரி, தோசை, சப்பாத்தி, சாம்பார், நூடுல்ஸ் என்று வகை வகையாக சமைக்கிறார். தான் தங்கியிருக்கும் இடத்திலேயே அவர் தினமும் ஒர்க்அவுட் செய்கிறார் என்றார் மேனகா.

விளம்பரம்

கீர்த்தி சொல்லியதும் உண்மை தான். கொரோனா வைரஸ் பயத்தில் இருக்கும் மக்கள் திருமண வதந்தியால் கீர்த்தியை பற்றி பேசினார்கள். இதுவும் ஒரு வகை இலவச விளம்பரமாகிவிட்டது. சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் அண்ணாத்த படத்தில் கீர்த்தி நடிக்கிறார். கொரோனா வைரஸ் பிரச்சனையால் ஷூட்டிங் பாதிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்