சென்னை : வளர்ந்து வரும் நடிகர் ஜெய் இளையதளபதி விஜய் சொன்ன வார்த்தையால் தான் வாழ்க்கையே மாறியதாக தெரிவித்துள்ளார். 1நடிகர் விஜய்க்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது. கேரளா, ஆந்திரா போன்ற பிற மாநிலத்திலும் அவருக்கு ரசிகர்கள் உள்ளனர். சினிமாத்துரையிலும் சாந்தனு, ஜி.வி.பிரகாஷ், ஜெய் போன்ற சினிமா நடிகர்களும் விஜய்யின் தீவிர ரசிகர்களாக உள்ளனர்.
இந்நிலையில் விஜய், ஜெய், ரீமாசென், வடிவேலு நடிப்பில் கடந்த 2002-ம் ஆண்டு வெளியான 'பகவதி' படம் வெளியானது. இதில் ஜெய், விஜய்யின் தம்பியாக நடித்தார். இதற்கு பின் துணை நடிகராக தொடர்ந்து நடித்து வந்தார்.
இந்நிலையில் ஒருதடவை பகவதி படத்துக்கு பின் மீண்டும் விஜய்யை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்த போது, அவர் ஜெய்க்கு ஒரு முக்கியமான அட்வைஸ் அளித்துள்ளார். அதில், இன்னும் துணை நடிகராக நடிக்காமல் கதாநாயகனாக நடிக்கும் படி தெரிவித்துள்ளார்.
அவரின் அறிவுரைக்கு பின் அவர் நடித்த படம் தான் சுப்பிரமணியபுரம். அதற்கு பின் அவர் நடித்த ராஜா ராணி, எங்கேயும் எப்போதும், அவள் பெயர் தமிழரசி உள்ளிட்ட படங்கள் ஹிட்டானது. தற்போது பார்ட்டி, கருப்பர் நகரம், மதுர ராஜா, பிரேக்கிங் நியூஸ், நீயா 2 உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார் ஜெய்.
இந்நிலையில் விஜய், ஜெய், ரீமாசென், வடிவேலு நடிப்பில் கடந்த 2002-ம் ஆண்டு வெளியான 'பகவதி' படம் வெளியானது. இதில் ஜெய், விஜய்யின் தம்பியாக நடித்தார். இதற்கு பின் துணை நடிகராக தொடர்ந்து நடித்து வந்தார்.