ஆப்நகரம்

இணையத்தில் மாஸ்டர் கசிந்தது எப்படி? வெளியான அதிர்ச்சி தகவல்!

மாஸ்டர் திரைப்படம் இணையத்தில் கசிந்தது தொடர்பான அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

Samayam Tamil 12 Jan 2021, 3:16 pm
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், மிகப்பெரிய பொருட்செலவில் உருவாகியுள்ள மாஸ்டர் திரைப்படம் 13ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது. இந்நிலையில் நேற்று இணையத்தில் படத்தின் காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
Samayam Tamil நடிகர் விஜய்
நடிகர் விஜய்


முன்னதாக இந்தப் படத்தை தயாரித்துள்ள 'செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ' நிறுவனம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடரப்பட்டது. அதில், சட்டவிரோதமாக இணையதளங்களில் மாஸ்டர் திரைப்படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சி.வி கார்த்திகேயன், 400 சட்டவிரோத இணையதளங்களில், 9 கேபிள் டி.வி.களிலும் மாஸ்டர் திரைப்படத்தை வெளியிட தடை விதித்து, 29 இணையதள சேவை வழங்கும் நிறுவனங்களுக்கு உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில் 11ஆம் தேதி மாலை இந்தப் படத்தின் காட்சிகள் பல இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. திரையரங்கில் எடுக்கப்பட்ட காட்சிகள் போல இருந்த அவை சிறிய சிறிய துண்டுகளாக இணையத்தில் வலம் வர ஆரம்பித்தன.

ட்விட்டர், வாட்ஸ் அப் என அனைத்திலும் அதனைப் பார்த்தவர்கள் மற்றவர்களுக்கு பகிர ஆரம்பித்தார்கள். இதனை அறிந்த படக்குழு உடனடியாக சுதாரித்துக்கொண்டு ட்விட்டர் நிறுவனத்திடம் புகார் அளித்து காட்சிகளை பகிர்ந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியது. அவர்களும் சட்டவிரோதமாக காட்சிகளை பெறுபவர்களின் கணக்குகளை உடனடியாக முடக்கினார்கள்.

விஜய்க்காக சிம்புவை முடக்க சதி: டி.ராஜேந்தர் பரபரப்பு குற்றச்சாட்டு!

மேலும் சுமார் ஒன்றரை ஆண்டுகள் உழைப்பு, தயவு செய்து யாரும் அக்காட்சிகளைப் பகிர வேண்டாம், இன்னும் ஒரு நாளில் 'மாஸ்டர்' உங்களுடையது என்று தயாரிப்பு நிறுவனமும் இயக்குநரும் சமூக வலைதளத்தில் கோரிக்கை வைத்தார்கள். பின்னர் இந்த காட்சிகள் எப்படி வெளியானது என்று படக்குழு விசாரணை நடத்தத் தொடங்கியது.

இதுவரை யார் யாரிடமெல்லாம் படத்தின் பிரதிகளை கொடுத்து இருக்கிறோம் என்ற ரீதியில் விசாரணை தொடங்கப்பட்டது. வெளிநாடுகளுக்கு விநியோகம் செய்வதற்காக சில தனியார் டிஜிட்டல் நிறுவனங்களுக்கு திரைப்படம் கொடுக்கப்பட்டிருக்கிறது.

திரையரங்கில் எடுக்கப்பட்ட காட்சி போல இருந்ததால் எந்தெந்த நிறுவனங்களிடம் திரையரங்குகள் இருக்கின்றன என்று ஆராயப்பட்டது. அப்போது இலங்கையில் வினியோகம் செய்வதற்காக ஒரு டிஜிட்டல் நிறுவனத்திடம் படம் கொடுக்கப்பட்டு அதில் இருந்து காட்சிகள் வெளியாகி இருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்ட நிலையில், அந்நிறுவனத்தில் உள்ள திரையரங்கும் வெளியான காட்சியில் உள்ள திரையரங்கம் ஒரே மாதிரியாக இருப்பதால் அவர்களிடம் இருந்து தான் காட்சி வெளியாகி இருக்கிறது என்று உறுதிப்படுத்தப்பட்டது.

அந்த நிறுவனத்தில் பணி செய்யும் கடைநிலை ஊழியர் ஒருவர் காட்சிகளை திருட்டுத்தனமாக பதிவு செய்து இணையத்தில் கசிய விட்டு இருக்கிறார். அவர் கண்டறியப்பட்டு இருப்பதனால் அவர் மீதும் டிஜிட்டல் நிறுவனத்தின் மீதும் புகாரை பதிவு செய்ய இருப்பதாக தயாரிப்பாளர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்