ஆப்நகரம்

Aishwarya Rajinikanth: ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் பினாமி நான்... அதிர வைத்த ஈஸ்வரி!

Aishwarya Rajinikanth: ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டில் நகைகளை திருடிய ஈஸ்வரி தன்னை அவருடைய பினாமி என கூறிக்கொண்டது விசாணையில் தெரியவந்துள்ளது.

Samayam Tamil 25 Mar 2023, 9:23 am
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டில் நகைகளை திருடிய ஈஸ்வரி தன்னை அவருடைய பினாமி கூறியிருப்பது விசாரணையில் அம்பலமாகியுள்ளது.
Samayam Tamil i am aishwarya rajinikanths benami says housemaid eeshwari
Aishwarya Rajinikanth: ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் பினாமி நான்... அதிர வைத்த ஈஸ்வரி!


நகைகள் திருட்டு

நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தனது இல்லத்தின் லாக்கரில் இருந்த பல லட்ச ரூபாய் மதிப்பிலான தங்க மற்றும் வைர நகைகள் காணமால் போனதாக தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதுதொடர்பாக விசாரணை நடத்திய காவல்துறையினர் கடந்த 6 மாதங்களுக்கு முன்னர் பணியில் இருந்து நின்ற பணிப்பெண் ஈஸ்வரியை பிடித்து விசாரணை நடத்தினர்.
Ajith: 'வாலி படத்தின் கதை சொன்னபோது'... அஜித் அப்பா குறித்து எஸ் ஜே சூர்யா உருக்கம்!

4 வருடங்களாக

அந்த விசாரணையில் வீட்டின் கார் ட்ரைவர் வெங்கடேசனுடன் இணைந்து ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் வீட்டில் இருந்த லாக்கரில் இருந்து நகைகளை திருடியதை ஈஸ்வரி ஒப்புக்கொண்டார். கடந்த 4 ஆண்டுகளாக சிறுகசிறுக தங்க மற்றும் வைர நகைகளை ஈஸ்வரி திருடியதும், திருடிய நகைகளை மயிலாப்பூரில் உள்ள நகைக்கடை ஒன்றில் விற்று பணம் வாங்கியதும் தெரியவந்தது.
என் அம்மா 47 வயசுல பிள்ளை பெத்ததுக்கு நான் எதுக்கு வெட்கப்படணும்? பிரபல நடிகை கேள்வி!

சொகுசு வீடு

மேலும் அந்த பணத்தில் சென்னை சோழிங்கநல்லூரில் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான சொகுசு வீட்டை ஈஸ்வரி வாங்கியதும், வெங்கடேசனுக்கு 9 லட்சம் வரை பணம் கொடுத்ததும் காவல்துறையினரின் விசாரணையில் தெரிய வந்தது. இதில் ஈஸ்வரியின் கணவருக்கும் தொடர்பு இருக்குமா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தினர்.


Khushbu Sundar: சுத்திப்போடுங்க மேடம்... சுந்தர் சி குஷ்புவின் ரொமான்டிக் க்ளிக்ஸ்!

ஐஸ்வர்யாவின் பினாமி

ஆனால் ஈஸ்வரி தனது கணவரிடம் எந்த உண்மையையும் சொல்லாமல் அவருக்கு எந்த சந்தேகமும் வராதப்படி ஒரு பெரும் நாடகத்தை அரங்கேற்றியிருப்பது தெரிய வந்துள்ளது. அதாவது சோழிங்க நல்லூரில் தன் பெயரில் வாங்கப்பட்ட வீடானது ஐஸ்வர்யாவிற்கு சொந்தமானது என்றும் தான் அவரின் பினாமி என்றும் தனது கணவர் அங்கமுத்துவிடம் சொல்லியிருக்கிறார் ஈஸ்வரி.
Ajith: நன்றியே இல்லாத ஆள் அஜித்... பிரபல நடிகர் ஆவேசம்!

ஈஸ்வரியின் நாடகம்

மேலும் வெளிஉலகத்திற்குதான் அது நம்முடைய வீடு என்றும் உண்மையில் அது ஐஸ்வர்யாவின் வீடே என்றும் கூறியுள்ளர். இதை வெளியே சொன்னால் ஐஸ்வர்யா ரஜினிகாந்திற்குதான் பிரச்சனை வரும் என்றும் அதன் காரணமாக தனது வேலையும் பறிபோகும் என்றும் அனைவரும் நம்பும்படி கதைக்கட்டி விட்டுள்ளார் பணி பெண் ஈஸ்வரி.
Aishwarya Rajinikanth: ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டில் திருடிய நகைகளை வைத்து ரூ. 1 கோடிக்கு சொகுசு வீடு.. விசாரணையில் அதிர்ச்சி!

ஐஸ்வர்யாவிடம் விசாரணை

பணி பெண் ஈஸ்வரி தன்னை ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் பினாமி என கூறி நாடகம் ஆடி அனைவரையும் வைத்திருப்பதை கேட்டு காவல் துறையினரே ஆடி போயுள்ளனர். இதனிடையே காவல்துறையினர் ஆய்வு நடத்தியதில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் புகார் கொடுத்ததை விட ஈஸ்வரியிடம் இருந்து 110 சவரன் நகைகள் அதிகமாக கைப்பற்றப்பட்டுள்ளது. இதுதொடர்பாக ஐஸ்வர்யா ரஜினிகாந்தையும் போலீசார் விசாரிக்க உள்ளனர்.
Jeevitha: நாங்க எப்போ வேணாலும் ரூம்முக்கு வருவோம்.. அட்ஜெஸ்ட்மெண்ட் கேட்ட இயக்குநர்.. பிரபல நடிகை திடுக்!

Aishwarya Rajinikanth

அடுத்த செய்தி

டிரெண்டிங்