தமிழக சட்டசபை தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சி தலைவர்களும், சினிமா பிரபலங்களும் ஆர்வமாக ஓட்டளித்து வருகின்றனர். தங்களை அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு ஆள வேண்டியது யார் என்பதை மக்களும் தங்கள் ஜனநாயக கடமையினை நிறைவேற்றி தேர்ந்தெடுத்து வருகினறனர். இந்நிலையில் ஓட்டளித்து விட்டு வெளியே வரும் சினிமா பிரபலங்கள் கொடுக்கும் பேட்டிகள் சமூக வலைத்தளங்களில் படுவேகமாக வைரலாகி வருகின்றன. வெயில், கொரோனோவின் தாக்கம் இவற்றை எல்லாம் பொருட்படுத்தாமல் மக்கள் ஆர்வமாக வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். அதனை போல் சினிமா பிரபலங்களும் வாக்களித்து விட்டு, மக்களையும் வாக்க்களிக்க கூறி ஆர்வமூட்டி வருகின்றனர். ரஜினி, கமல், சூர்யா, அஜித், விஜய், அருண்விஜய், விஜயகுமார், விக்ரம், என சினிமா பிரபலங்கள் பலரும் வாக்குச்சாவடிகளுக்கு வந்து தங்களது வாக்கை செலுத்தினர்.
விஜய் வாக்குச்சாவடி மையத்திற்கு சைக்கிளில் வந்து வாக்களித்தது பரபரப்பினை கிளப்பியது. வீடு அருகில் இருப்பதால் வாக்குச்சாவடி மையத்திற்கு சைக்களில் வந்ததாக அவர் கூறினாலும், தினமும் விண்ணை மூட்டும் பெட்ரோல், டீசல் விலை உயர்வை குறிப்பிடும் விதமாகவே, விஜய் சைக்கிளில் வந்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இதே போல் நடிகர் அஜித் அணிந்து வந்த, கருப்பு சிவப்பு மாஸ்கிற்கும் ரசிகர்கள் குறியீடுகள் கண்டறிந்து வருகின்றனர்.
இந்நிலையில் சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள வாக்குச்சாவடியில் தனது மனைவியுடன் வந்து நடிகர் விஜய் சேதுபதி தனது வாக்கினை பதிவு செய்துள்ளார். அதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் விஜய் சேதுபதி, தான் சாதி, மதத்திற்கு அப்பாற்பட்டவன் தான் என்றும், அதுதான் தனது நிலைப்பாடு என்றும் கூறினார். மேலும் மனிதர்கள் தான் முக்கியம் என்றும் கூறினார்.
அதனை தொடர்ந்து நடிகர் விஜய் சைக்கிளில் வந்து வாக்களித்து சென்றது தொடர்பாக விஜய் சேதுபதியிடம் கேள்வி எழுப்பினார்கள் நிரூபர்கள். அதற்கு விஜய்யிடமே அது குறித்து கேட்டு தெரிந்து கொள்ளுங்கள் என்று பதிலளித்து விட்டு சென்றார் நடிகர் விஜய். தற்போது மும்பைக்கார், காந்தி டாக்கிஸ் போன்ற இந்தி படங்களில் நடித்து வரும் நடிகர் விஜய் சேதுபதி, தமிழில் பொன்ராம் இயக்கத்தில் தனது 46 வது திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
விஜய் வாக்குச்சாவடி மையத்திற்கு சைக்கிளில் வந்து வாக்களித்தது பரபரப்பினை கிளப்பியது. வீடு அருகில் இருப்பதால் வாக்குச்சாவடி மையத்திற்கு சைக்களில் வந்ததாக அவர் கூறினாலும், தினமும் விண்ணை மூட்டும் பெட்ரோல், டீசல் விலை உயர்வை குறிப்பிடும் விதமாகவே, விஜய் சைக்கிளில் வந்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இதே போல் நடிகர் அஜித் அணிந்து வந்த, கருப்பு சிவப்பு மாஸ்கிற்கும் ரசிகர்கள் குறியீடுகள் கண்டறிந்து வருகின்றனர்.
இந்நிலையில் சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள வாக்குச்சாவடியில் தனது மனைவியுடன் வந்து நடிகர் விஜய் சேதுபதி தனது வாக்கினை பதிவு செய்துள்ளார். அதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் விஜய் சேதுபதி, தான் சாதி, மதத்திற்கு அப்பாற்பட்டவன் தான் என்றும், அதுதான் தனது நிலைப்பாடு என்றும் கூறினார். மேலும் மனிதர்கள் தான் முக்கியம் என்றும் கூறினார்.
அதனை தொடர்ந்து நடிகர் விஜய் சைக்கிளில் வந்து வாக்களித்து சென்றது தொடர்பாக விஜய் சேதுபதியிடம் கேள்வி எழுப்பினார்கள் நிரூபர்கள். அதற்கு விஜய்யிடமே அது குறித்து கேட்டு தெரிந்து கொள்ளுங்கள் என்று பதிலளித்து விட்டு சென்றார் நடிகர் விஜய். தற்போது மும்பைக்கார், காந்தி டாக்கிஸ் போன்ற இந்தி படங்களில் நடித்து வரும் நடிகர் விஜய் சேதுபதி, தமிழில் பொன்ராம் இயக்கத்தில் தனது 46 வது திரைப்படத்தில் நடித்து வருகிறார்.