நடிகை தமன்னா, கதாநாயகிக்கு முக்கியத்தும் உள்ள கதைகளையே தேர்வு செய்து நடிக்க விரும்புவதாகக் கூறியுள்ளார்.
நடிகை தமன்னா, சினிமாவில் நடிக்க வந்து, 10 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன. இதையொட்டி, ஐதராபாத் நகரில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:
சினிமாவுக்கு நடிக்க வருவேன் என ஒருபோதும் நினைத்ததில்லை. ஆனால், சினிமா வாய்ப்பு கிடைத்ததோடு, கடந்த 10 ஆண்டுகளாக முன்னணி நடிகையாக வலம் வருகிறேன். இதுவரை பலதரப்பட்ட படங்களில் நடித்திருக்கிறேன். இனி வரும் நாட்களில், கதைக்கு முக்கியத்துவம் அளிக்கும் படங்களை தேர்வு செய்ய விரும்புகிறேன்.
குறிப்பாக, ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளில் நடிக்க ஆர்வமாக உள்ளேன். பாகுபலி படத்தில் எனக்குக் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, இந்த முடிவை எடுத்துள்ளேன்.
24 மணிநேரமும் ஓய்வு இல்லாமல் நடித்தாலும் கூட எனக்கு அலுப்பு ஏற்படவில்லை. அந்த அளவுக்கு சினிமா பிடித்து இருக்கிறது. சினிமா ஒரு கனவு உலகம். அதனால்தான் இங்கு வேலை செய்யும் ஒவ்வொரு நிமிடமும் மகிழ்ச்சியாக இருக்கிறது. படப்பிடிப்பு அரங்குகள் ஒவ்வொன்றும் எனக்கு பள்ளிகூடம் போலவே தோன்றுகிறது.
இவ்வாறு நடிகை தமன்னா தெரிவித்துள்ளார்.
‘’I am choosy to act in heroin based film stories after Baahubali success,’’ says Tamannaah.
நடிகை தமன்னா, சினிமாவில் நடிக்க வந்து, 10 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன. இதையொட்டி, ஐதராபாத் நகரில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:
சினிமாவுக்கு நடிக்க வருவேன் என ஒருபோதும் நினைத்ததில்லை. ஆனால், சினிமா வாய்ப்பு கிடைத்ததோடு, கடந்த 10 ஆண்டுகளாக முன்னணி நடிகையாக வலம் வருகிறேன். இதுவரை பலதரப்பட்ட படங்களில் நடித்திருக்கிறேன். இனி வரும் நாட்களில், கதைக்கு முக்கியத்துவம் அளிக்கும் படங்களை தேர்வு செய்ய விரும்புகிறேன்.
குறிப்பாக, ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளில் நடிக்க ஆர்வமாக உள்ளேன். பாகுபலி படத்தில் எனக்குக் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, இந்த முடிவை எடுத்துள்ளேன்.
24 மணிநேரமும் ஓய்வு இல்லாமல் நடித்தாலும் கூட எனக்கு அலுப்பு ஏற்படவில்லை. அந்த அளவுக்கு சினிமா பிடித்து இருக்கிறது. சினிமா ஒரு கனவு உலகம். அதனால்தான் இங்கு வேலை செய்யும் ஒவ்வொரு நிமிடமும் மகிழ்ச்சியாக இருக்கிறது. படப்பிடிப்பு அரங்குகள் ஒவ்வொன்றும் எனக்கு பள்ளிகூடம் போலவே தோன்றுகிறது.
இவ்வாறு நடிகை தமன்னா தெரிவித்துள்ளார்.
‘’I am choosy to act in heroin based film stories after Baahubali success,’’ says Tamannaah.