ஆப்நகரம்

இன்னும் 100 ஆண்டுகள் ஆனால் கூட எஸ்.பி.பி.யின் குரல் ஒலித்துக் கொண்டே இருக்கும்: ரஜினி

எஸ்.பி.பி.யின் இனிமையான, கம்பீரமான குரல் இன்னும் 100 ஆண்டுகள் ஆனால் கூட நம் காதுகளில் ஒலித்துக் கொண்டு தான் இருக்கும் என ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 25 Sep 2020, 9:31 pm
கொரோனா வைரஸ் பாதிப்பால் அவதிப்பட்டு வந்த எஸ்.பி. பாலசுப்பிரமணியம் இன்று மாரடைப்பால் மரணம் அடைந்தார். அவரின் மரண செய்தி அறிந்த ரஜினிகாந்த் ட்விட்டரில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
Samayam Tamil rajinikanth


அந்த வீடியோவில் ரஜினி கூறியிருப்பதாவது,
இன்று ரொம்ப சோகமான நாள். கடைசி நிமிஷம் வரைக்கும் உயிருக்காக போராடி மதிப்பிற்குரிய எஸ்.பி.பி. அவர்கள் நம்மை விட்டு பிரிந்துவிட்டார்கள். அவருடைய பிரிவு மிகுந்த வேதனையும், அதிர்ச்சியும் அளிக்கிறது. எஸ்.பி.பி. அவர்களுடைய பாட்டுக்கும், குரலுக்கும் ரசிகர்கள் இல்லாதவர்களே இந்தியாவில் இருக்க மாட்டார்கள். அவருக்கு தெரிந்தவர்கள் அவரின் பாட்டை விட, குரலை விட அவரையை ரொம்ப நேசித்தார்கள். அதற்கு காரணம் அவருடைய மனிதநேயம்.
அவர் எல்லோரையும் சின்னவங்க, பெரியவங்க என்று பார்க்காமல் மதிச்சாங்க, கவுரவம் கொடுத்தாங்க, அன்பு கொடுத்தாங்க. அவ்வளவு பெரிய ஒரு நல்ல அன்பான மனிதர். இந்திய திரையுலகம் எத்தனையோ மிகப்பெரிய பாடகர்களை உருவாக்கியுள்ளது. முகமது ரஃபி அவர்கள், கிஷோர் குமார் அவர்கள், டி.எம். சௌந்தரராஜன் அவர்கள். அவர்களுக்கு இல்லாத ஒரு சிறப்பு நம்ம எஸ்.பி.பி. அவர்களுக்கு இருக்கு. அவர்கள் எல்லோரும் குறிப்பிட்ட பாஷையில் தான் பாடினாங்க. ஆனால் எஸ்.பி.பி. அவர்கள் பல பாஷையில பாடினாங்க. இந்தியாவில் இருக்கும் அனைவருக்கும் அவரை தெரியும்.

முக்கியமாக தென்னிந்தியாவுல வந்து அவருடைய ரசிகர்களே இல்லாமல் இருக்க மாட்டாங்க. அவ்வளவு வந்து ரசிச்சாங்க. அவருடைய அந்த இனிமையான, கம்பீரமான அந்த குரல் இன்னும் 100 ஆண்டுகள் ஆனால் கூட நம் காதுகளில் ஒலித்துக் கொண்டு தான் இருக்கும். ஆனால் அந்த குரலின் உரிமையாளர் நம்முடன் இனி இல்லை எனும்போது மிகுந்த வருத்தம் அளிக்கிறது. மிகப்பெரிய ஆத்மா, மிகப்பெரிய பாடகர், மிகப்பெரிய மகான். அவருடைய ஆத்மா சாந்தியடையணும். அவருடைய குடும்பத்தாருக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள் என்று தெரிவித்துள்ளார்.

ஏழு தலைமுறைக்கும் அவர் புகழ் வாழும்:எஸ்.பி.பி. பற்றி கமல் உருக்கம்

அடுத்த செய்தி

டிரெண்டிங்