ஆப்நகரம்

நான் யார் கட்டுப்பாட்டிலும் இல்லை - நடிகை ஸ்ரீபிரியங்கா விளக்கம்

தான் எந்த தயாரிப்பாளர், இயக்குனர், மேனேஜர் என யாருடைய கட்டுப்பாட்டிலும் இல்லை என நடிகை ஸ்ரீபிரியங்கா விளக்கமளித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

Samayam Tamil 21 Jul 2018, 4:52 pm
சென்னை : தான் எந்த தயாரிப்பாளர், இயக்குனர், மேனேஜர் என யாருடைய கட்டுப்பாட்டிலும் இல்லை என நடிகை ஸ்ரீபிரியங்கா விளக்கமளித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.
Samayam Tamil SriPriyanka


சமீபத்தில் நான் ஒரு சினிமா துறையை சேர்ந்தவரின் கட்டுப்பாட்டில் இருப்பதாக ஒரு பொய்யான செய்தி வெளியானது வருத்தமளிப்பதாக நடிகை ஸ்ரீபிரியங்கா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில், “ம்டுஹலில் ஒரு விஷயத்தை விளக்கி விடுகிறேன். நான் எந்த ஒரு தயாரிப்பாளர்/ இயக்குனர் / மேனேஜரின் கட்டுப்பட்டிலும் இல்லை. நான் திரைத்துறையில் சாதிக்க காத்திருக்கும் சுதந்திர நடிகை தான்.
வந்தா மல, கோடை மழை, ஸ்கெட்ச், மிக மிக அவசரம், பிச்சுவாக்கத்தி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறேன். தற்போது ஜெஸ்ஸி என்ற படம் வெளியாக உள்ளது.

இதுவரை என்னைப் பற்றியும், என் நடிப்பை பற்றியும் யாரும் குறை சொன்னதில்லை. இனியும் அப்படியே இருப்பேன். படத்தின் பட்ஜெட், கதாநாயகனைப் பொருத்து என்னை சமரசம் செய்துகொண்டதில்லை.” என தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்