ஆப்நகரம்

‘சரப்ஜித்’ படத்தில் நடித்தது பெருமையளிக்கிறது:- ஐஸ்வர்யா ராய்!

‘சரப்ஜித்’ படத்தில் நடித்தது தனக்கு பெருமையளிக்கிறது என்று ஒரு பேட்டியில் நடிகை ஐஸ்வர்யா ராய் கூறியுள்ளார்.

TOI Contributor 19 Apr 2016, 2:52 pm
‘சரப்ஜித்’ படத்தில் நடித்தது தனக்கு பெருமையளிக்கிறது என்று ஒரு பேட்டியில் நடிகை ஐஸ்வர்யா ராய் கூறியுள்ளார்.
Samayam Tamil i am proud of acting in sarbjit movie iswarya rai
‘சரப்ஜித்’ படத்தில் நடித்தது பெருமையளிக்கிறது:- ஐஸ்வர்யா ராய்!

பாகிஸ்தான் சிறையில் வாடி, அங்கு நடந்த கலவரத்தில் கொல்லப்பட்டவர் இந்தியரான சரப்ஜித் சிங். இவரது வாழ்க்கை, இப்போது ‘சரப்ஜித்’ என்ற பெயரில் படமாக உருவாகியுள்ளது. ஓமங் குமார் இயக்கியுள்ளார். இப்படத்தில் சரப்ஜித்தின் தங்கை ரோலான தல்பீர் கவுர் ரோல் மிகவும் பவர்புல்லானது, இதில் ஐஸ்வர்யாராய் நடிக்கிறார். இப்படத்தில் நடித்தது மிகவும் பெருமை அளிப்பதாக கூறியுள்ளார் ஐஸ்வர்யாராய்.
இதுகுறித்து அவர் கூறுகையில், ‘’ஒரு நடிகராக இது போன்ற ஒரு வாய்ப்புகளுக்கு காத்திருக்கத் தான் வேண்டும். எனக்கு இப்படி ஒரு ரோல் கிடைத்தது மகிழ்ச்சி. இந்தப்படத்தில் எனக்கான மேக்-அப் பெரிய ப்ளஸாக அமைந்துள்ளது. தற்போதைய சூழலில் சரப்ஜித் கதைபற்றி கூற முடியாது. இயக்குநர் ஓமங் குமார் உள்ளிட்ட இந்தப்படத்தில் பணியாற்றிய அத்தனை கலைஞர்களுக்கும் நான் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இப்படிப்பட்ட ஒரு படத்தில் நான் நடித்தது பெருமையளிக்கிறது’’ என்றார்.
‘சரப்ஜித்’ படத்தில் சரப்ஜித் சிங்காக ரன்தீப் ஹூடாவும், அவரது தங்கை ரோலான தல்பீர் ரோலில் ஐஸ்வர்யாவும் நடித்துள்ளனர். இப்படம் வருகிற மே 19ம் தேதி ரிலீஸாக இருக்கிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்