ஆப்நகரம்

நல்ல கதை கிடைத்தால் படத்தை தயாரிப்பேன் - காஜல் அகர்வால்!

நல்ல கதை கிடைத்தால் படத்தை தயாரிப்பேன் என்று பிரபல நடிகை காஜல் அகர்வால் கூறியுள்ளார்.

Samayam Tamil 25 Jun 2018, 6:40 pm
நல்ல கதை கிடைத்தால் படத்தை தயாரிப்பேன் என்று பிரபல நடிகை காஜல் அகர்வால் கூறியுள்ளார்.
Samayam Tamil kajal


நடிகை காஜல் அகர்வால் தற்போது ‘குயின்’ இந்தி ரீமேக் படமான ‘பாரிஸ் பாரிஸ்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை நடிகர் ரமேஷ் அரவிந்த் இயக்கி வருகிறார். மேலும் காஜல் அகர்வால் தெலுங்கிலும் பல படங்களில் நடித்து வருகிறார்.

நடிகை காஜல் அகர்வால் சில வருடங்களுக்கு முன்பு மும்பையில் ஒரு தொழிலதிபருடன் இணைந்து நகைக்கடை ஒன்றை நடத்தி வருகிறார்.

இந்த நிலையில், அடுத்தகட்டமாக காஜல் அகர்வாலுக்கு தயாரிப்பாளராகும் ஆசை வந்து விட்டது. அதுகுறித்து காஜல்அகர்வால் கூறுகையில், ‘‘நகைக்கடை வியாபாரத்தை இன்னும் மேம்படுத்தும் பணியில் ஈடுபட்டிருக்கிறேன். மேலும், சினிமாவிலும் நல்ல கதை அமைந்தால் படம் தயாரிக்கும் விருப்பமும் உள்ளது. அதற்கான சரியான சந்தர்ப்பம் கூடி வரும்போது நான் தயாரிப்பாளராகவும் மாறுவேன்’’ என்றார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்